ரயில்வே எஸ்.பி., தகவல்
கோவை, டிச. 6 – ரயில் மோதியதில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 800 பேர் உயிரிழந்துள் ளதாகவும், சென்னையில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் ரயில்வே எஸ்.பி. மகேஸ்வரன் தெரிவித் துள்ளார் கோவை இருப்பு பாதை காவல் நிலை யத்தில் ரயில்வே காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் வெள்ளியன்று செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் 200 பேர் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 800 பேர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். ரயில் மோதி உயிரிழப்போர் எண்ணிக்கை சென் னையில் அதிகமாக உள்ளது. ரயில் மோதி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப் பதை தவிர்க்க வேண்டும். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் பாதுகாப் பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாகவும், பாதைகளுக்கு அருகே யுள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை இடமாற்ற கோரி மாவட்ட ஆட்சி யர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரி வித்தார். மேலும் ரயில்வே காவல் துறை யில் 20 சதவிகித காவலர்கள் பற்றாக்குறை உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.