ஈரோடு, அக். 6- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா 12 ஆவது மாநாட்டில், தாலுகா செயலாளராக ஆர்.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா 12 ஆவது மாநாடு தள வாய் பேட்டையில் ஞாயிறன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் மற்றும் கே. விஜயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்த னர். மூத்த தோழர் எஸ்.தம்பி மாநாட்டு கொடி யினை ஏற்றி வைத்தார். ஆர்.பிரகாஷ் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். வி.தமிழ்செல்வன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.விஜயராகவன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். தாலுகாச் செயலாளர் எஸ். மாணிக்கம் அறிக்கை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில், காவிரி ஆறு மற்றும் பவானி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானி நகரில் போக்குவரத்து நெரி சலை தவிர்க்க சுற்றுச் சாலை பணியினை விரைந்து முடிக்க வேண் டும். அஸ்தர் பை தொழி லாளர்களுக்கு நியாயமான கூலி மற்றும் மருத்துவ பாதுகாப்பு வழங்க வேண் டும். நலிந்து வரும் ஜமக் காள நெசவுத் தொழிலை பாதுகாக்க வேண்டும். பவானி பேருந்து நிலைய பகுதியில் சாக் கடை மற்றும் கழிவறை வசதியை மேம்ப டுத்தி சுகாதாரத்தை உறுதி செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இம்மாநாட்டில், 9 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. புதிய கமிட்டி யின் செயலாளராக ஆர். பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.பி. பழனிச்சாமி நிறைவ ரையாற்றினார். முடிவில் சண்முகம் நன்றி கூறினார்.