சேலம், நவ.24- மார்க்சிஸ்ட் கட்சியின் நங்க வள்ளி ஒன்றியச் செயலாளராக ஆர்.கிருஷ்ணவேணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் சேலம் மாவட்டம், நங்க வள்ளி ஒன்றிய 9 ஆவது மாநாடு, தோழர் எஸ்.பாண்டியன் நுழை வுவாயில், தோழர்கள் என்.சங்கரய்யா, சீதா ராம் யெச்சூரி ஆகியோரது நினைவரங் கத்தில் ஜலகண்டாபுரத்தில் சனியன்று நடை பெற்றது. பி.ஆர்.கந்தசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கிருஷ்ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் பிவெங்கடேஷ் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா துவக்கவுரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே. ராஜாத்தி அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்க டபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கவிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், காவிரி உபரிநீர் திட் டத்தை முறையாக செயல்ப டுத்தி இப்பகுதியிலுள்ள 100-க் கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை முழுமையாக காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும். கனரக வாகன போக் குவரத்து நெரிசலை கட்டுப்ப டுத்திட ஜலகண்டாபுரம் புற வழிச்சாலை திட்டத்தை உட னடியாக நிறைவேற்ற வேண்டும். சேலம் ஜவுளி பூங்கா திட்டத்தை உடன டியாக செயல்படுத்த வேண்டும். ஜவுளித் தொழிலை பாதுகாக்க மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் நங்க வள்ளி ஒன்றியச் செயலாளராக ஆர்.கிருஷ் ணவேணி மற்றும் 13 ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் நிறைவுரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப் பினர் பி.விஜயகுமார் நன்றி கூறினார்.