சேலம், அக்.4- அரசு மகளிர் பள்ளியில் குடி நீரில் புழுக்கள் உள்ளதை சுட்டிக் காட்டிய மாணவியை முட்டிபோட வைத்து தலைமையாசிரியர் தண் டித்த சம்பவம் சேலத்தில் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரம், கோட்டைப் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில் அடிப்படை வசதிகளான குடி நீர், கழிவறை உள்ளிட்ட கட்ட மைப்பு வசதிகள் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாமல், கழி வறையில் மாணவிகள் பயன்படுத் திய நாப்கின் சுகாதாரமற்ற முறை யில் கிடப்பதால் நோய்த்தொற்று பர வும் அபாய நிலை உள்ளது. மேலும், குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தா ததால் புழுக்கள், பூச்சிகள், குப்பை கள் குவிந்து கிடக்கின்றன. பள்ளி நிர்வாகம் குடிநீர் தொட்டியை பல மாதங்களாக தூய்மைபடுத்தாமல் மாணவிகளுக்கு மாசடைந்த குடி நீரை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குடிநீரைப் பருகும் மாணவிகளின் உடல்நிலை பாதிக் கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று மதிய உணவு இடைவேளையின்போது தண்ணீர் பருகச் சென்ற மாணவிகள் குடிநீரில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து தலை மையாசிரியரிடம் புகார் தெரிவித் துள்ளனர். அப்போது இரண்டு மாணவிகளையும் முட்டிபோட வைத்து தண்டனை கொடுத்ததா கவும், இதுகுறித்து வெளியில் யாரி டமாவது கூறினால் மாற்றுச்சான்றி தழை (டிசியை) கொடுத்து விடு வோம் என தலைமையாசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மாணவி கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் மாசடைந் துள்ளது. இந்த தண்ணீரை குடிக் கும் மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதை கள் ஏற்படுவதாக புகார் தெரிவித்த னர். எனவே, பள்ளி நிர்வாகம் உடன டியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதோடு, இனிவரும் காலங் களில் இதுபோன்ற நடக்காமல் இருக்க முதன்மை கல்வி அலுவ லர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், கழிவறைகளையும் முறையாக சுத் தம் செய்து சுகாதாரமாக பயன்படுத் துவதற்கு வழிவகை செய்ய வேண் டும் என வேண்டுகோள் விடுத்த னர். பள்ளிகளில் மாணவ, மாணவி களை அடித்து துன்புறுத்தக்கூடாது என அரசு பல்வேறு வகையில் ஆசி ரியர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது. அதனையும் மீறி தற் போது சேலத்தில் குறைகளை சுட் டிக்காட்டிய மாணவிகளை தலை மையாசிரியரே முட்டிபோட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. எனவே, இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, மாணாக்கர்களிடம் குறை களை கேட்டறிய வேண்டும். அவ் வாறு குறைகளை கண்டறியப்பட் டால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், மாணவர்களை துன்பு றுத்தும் ஆசிரியர்களுக்கு உளவி யல் சார்ந்த பயிற்சி அளித்து, அவர் களை ஒழுங்குபடுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.