நாமக்கல், அக்.10- ஆயுதபூஜையை முன்னிட்டு, சாலையில் பூசணிக் காய் உடைப்பதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் திருச்செங்கோட்டில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடைபெற்றுது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன் னிட்டு, சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக்கூடாது. மீறி உடைத்தால் ஏற்படும் விபத்துக்கள் என்னென்ன என் பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வாகனப் பிரச் சாரம் நடைபெற்றது. மெட்ராஸ் ரோட்டரி சங்கம், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை, பரணி டிரஸ்ட், விசா கன் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இப்பிரச்சாரத்தை, நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு துவக்கி வைத்தார். இதில் பிஆர்டி நிறுவனங்க ளின் மேலாண்மை இயக்குநர் பரந்தாமன், காவல் ஆய் வாளர் வெங்கட்ராமன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கவின் ராஜ், சசிகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ் வரி, திவ்யா, சண்முகவடிவு, செல்வி, தாமரைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, பூசணிக் காயால் ஏற்படும் விபத்தை விளக்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் தவறி விழுவது போல் காட்சிப் படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர் களை வெகுவாக ஈர்த்தது.