districts

img

சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு - சிஐடியு நடைபயணம்

நாமக்கல், மே 3- 7 மாதங்களாக ஊதியம் வழங் காததுடன், ஓட்டுநர் உரிமத்தை பறித்து வைத்துக் கொண்ட போர் வெல் உரிமையாளர் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக் கல் மாவட்ட மோட்டார் இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐ டியு) நடைபயணத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், எலச்சிபாளை யம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் செங்கோடன் (61). இவருக்கு மனைவியும், இரு பெண் குழந்தை களும் உள்ளனர். செங்கோடன், ராசிபுரம் வெற்றி விகாஸ் கல்வி நிலையம் பின்புறம் எஸ்ஆர்வி கார்டனில் வசித்து வரும் சண் முகா போர்வெல்ஸ் என்ற ரிக் வண்டியில் ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த  ஆண்டு நவ.7 ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு போர்வெல் பணிக்கு சென்றுள் ளார். அப்போது இவரது ஓட்டுனர் உரிமத்தை, போர்வெல்ஸ் உரி மையாளரிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால், அதன்பின் னர் ஓட்டுநர் உரிமத்தையும், சம் பளத்தையும் தராமல் உரிமையா ளர் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.  இந்நிலையில், இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், செங் கோடனின் ஓட்டுநர் உரிமம் மற்றும் சம்பளத்தை மீட்டுத்தர வலியு றுத்தி நாமக்கல் மாவட்ட மோட் டார் இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கத்தினர் (சிஐடியு) கை களில் திருவோடு ஏந்தி நடைபய ணத்தில் ஈடுபட்டனர். இப்பயணத் திற்கு சங்கத்தின் மாவட்ட செயலா ளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், சிஐ டியு தலைவர் பி.பெரியசாமி, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி உட்பட  பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த நடைபயணம் எலச்சிபாளையம், கொன்னை யார், நல்லாம்பாளையம், செக்கா ரப்பட்டி, வையப்பமலை, குரு சாமிபாளையம், ஆண்டலூக லூர்கேட் வழியாக வந்து ராசிபுரம் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நிறைவு பெரும் என சங்கத்தின் நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.