திருப்பூர், ஜுன் 2- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் “தமிழி லக்கிய மாணவர்களின் படைப்புகள் 2022“ என்ற நூல் வெளி யீடு புதனன்று நடைபெற்றது. அந்நூலை எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான மு. சந்திரகுமார் வெளியிட கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். மு. சந்திர குமார் ” திரைமொழி” என்ற தலைப்பில் உரையாற்றும் போது மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்கள், பார்க்க வேண்டியத் திரைப்படங்கள் பற்றி விரிவாக எடுத்து ரைத்தார். நூலைத் தொகுத்த பேராசிரியை மகேஸ்வரி பேசுகை யில், ”பழம் பெரும் மரபுகளைக் கொண்டவை தமிழ் இலக்கியங்கள். காலந்தோறும் தோன்றிய இவ்விலக்கியங் களில் அனைவரும் எழுதத்தக்க வகையில் புதுக் கவிதை இலக்கியங்கள் விளங்குகிறது. கவிதைப்படைப்பு களை எழுதிய எம் மாணாக்கர்களின் புதிய கருத்து களையும், புதிய சிந்தனைகளையும் பறை சாற்றும் விதத் தில் இந்நூல் திகழுகிறது என்றார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.