ஜன.22ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
சேலம், ஜன.5- ஜன.22 ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்படும் என சேலம் ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் படி 2024 ஆம் ஆண்டிற்கான புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.27 ஆம் தேதி வௌியிடப்பட்டு சிறப்பு சுறுக்கமுறை திருத்தத்திற்கான பணிகள் மேற்கொள்ள உத் தரவிடப்பட்டது. அதன்படி அக்.27 முதல் டிச.9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுறுக்கமுறை திருத்த பணிகளுக் கான படிவங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இறுதி வாக்காளர் ஜன.22 ஆம் தேதி வௌி யிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் விபத்து: போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி, ஜன.5- தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால், சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஈச்சர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய் வழியே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை யில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக் குள்ளானது. மேலும், அந்த கார் முன்னே சென்று கொண்டி ருந்த கன்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு, விபத்துக் குள்ளான வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்றது. இவ் விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தொப்பூர் கணவாய் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே விபத்துக்கள் நடைபெறாது. எப்போது உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டி களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்க டேசன் (36). இவர் நூலஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரி டம் மிட்டா நூலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி தனது பூர்வீக நிலம், தனது தாத்தா பச்சையப்பன் மற்றும் அவரின் தந்தை காளியப்பன் பெயரில் இருந்துள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டா எண் ணில் காளியப்பன் மகன் பச்சையப்பன் மற் றும் சடையன் என்கின்ற பச்சையப்பன், தகப்ப னார் பெயர் கமலேசன் என இருவர் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது. இதனால் சடை யன் என்பவர் தங்களுக்கு சொந்தமில்லை. இந்த பெயரை நீக்கி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம், கடந்த டிச.12 ஆம் தேதியன்று கணேசமூர்த்தி கேட்டுள் ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து டிச.28 மற்றும் 29 ஆம் தேதியன்று தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதுகுறித்து கணேசமூர்த்தி தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலு வலகத்திற்கு சென்று புகாரளித்தார். அதன் பேரில், வெள்ளியன்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் பெரு மாள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கணேசமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் ரசாயனம் தட விய ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சாமி கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதாவி டம் கொடுத்துள்ளார். அமுதா கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுவன் பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த செப்.3 ஆம் தேதியன்று கோவை மாவட் டம், மருதமலை முருகன் கோவில் மலை யடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அந்த சிறுமியை சிறுவன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நி லையில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தரு மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திரு மணம் செய்து கர்ப்பமாகிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 ஆயிரம் பேர் பங்கேற்கும் மினி மாரத்தான் போட்டி
நாமக்கல், ஜன.5- திருச்செங்கோட்டில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் மினி மாரத்தான் போட்டி ஞாயிறன்று (நாளை) நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஞாயிறன்று (நாளை) கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறையும் இணைந்து மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போதை தடுப்பு விழிப்புணர்வு நோக்கத்தை முன் நிறுத்தி இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களும் நாமக்கல் காவல் துறையும் இணைந்து மினி மாரத்தான் போட்டிகளை நடத்த உள்ளது. 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், இரண்டரை கிலோ மீட்டர், ஒரு கிலோ மீட்டர் என ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கேஎஸ்ஆர் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைவர் சச்சின் சிவா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர், என்றார்.
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு சேலம் மாநகராட்சி ரூ.31 லட்சம் வழங்கல்
சேலம், ஜன.5- மிக்ஜம் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சேலம் மாநகராட்சி சார்பில் ரூ.31.60 லட்சம் முதல்வர் பொது நிவா ரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மிக் ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சேலம் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற் றும் அனைத்து வார்டு உறுப்பினர்களின் டிசம்பர் மாத மதிப் பூதியம் மொத்தம் ரூ.6,25,000 மற்றும் சேலம் மாநகராட்சி பணி யாளர்கள், அலுவலர்கள் 1,621 பேரின் டிசம்பர் மாத ஊதியத் தில் இருந்து ஒரு நாள் ஊதியம் ரூ.25,35,037 பிடித்தம் செய் யப்பட்டுள்ளது. இந்த மொத்தத் தொகையான ரூ.31,60,037 முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பூர் விபத்து: போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி, ஜன.5- தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால், சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி சென்ற ஈச்சர் லாரி ஒன்று தொப்பூர் கணவாய் வழியே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை யில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக் குள்ளானது. மேலும், அந்த கார் முன்னே சென்று கொண்டி ருந்த கன்டெய்னர் லாரி ஒன்றின் மீது மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு, விபத்துக் குள்ளான வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்றது. இவ் விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தொப்பூர் கணவாய் பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே விபத்துக்கள் நடைபெறாது. எப்போது உயர்மட்ட பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டி களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்க டேசன் (36). இவர் நூலஹள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரி டம் மிட்டா நூலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசமூர்த்தி தனது பூர்வீக நிலம், தனது தாத்தா பச்சையப்பன் மற்றும் அவரின் தந்தை காளியப்பன் பெயரில் இருந்துள்ளது. இது கடந்த 2021 ஆம் ஆண்டு பட்டா எண் ணில் காளியப்பன் மகன் பச்சையப்பன் மற் றும் சடையன் என்கின்ற பச்சையப்பன், தகப்ப னார் பெயர் கமலேசன் என இருவர் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது. இதனால் சடை யன் என்பவர் தங்களுக்கு சொந்தமில்லை. இந்த பெயரை நீக்கி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம், கடந்த டிச.12 ஆம் தேதியன்று கணேசமூர்த்தி கேட்டுள் ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து டிச.28 மற்றும் 29 ஆம் தேதியன்று தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரம் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதுகுறித்து கணேசமூர்த்தி தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலு வலகத்திற்கு சென்று புகாரளித்தார். அதன் பேரில், வெள்ளியன்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர் பெரு மாள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கணேசமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் ரசாயனம் தட விய ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சாமி கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதாவி டம் கொடுத்துள்ளார். அமுதா கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனிடம் கொடுக்கும் பொழுது மறைந்திருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், 17 வயது சிறுவனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந் நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுவன் பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த செப்.3 ஆம் தேதியன்று கோவை மாவட் டம், மருதமலை முருகன் கோவில் மலை யடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அந்த சிறுமியை சிறுவன் திருமணம் செய்து கொண்டு கோவையில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நி லையில் கர்ப்பமடைந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தரு மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அரூர் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திரு மணம் செய்து கர்ப்பமாகிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுடன் முதல்வர் முகாம் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண சிபிஎம் கோரிக்கை
கோவை, ஜன.5- மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்க ளின் மீது விரைந்து தீர்வு ஏற்படுத்தித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோவை ஒண்டிபுதூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைக்கான தீர்வு வேண்டி மனு அளித்தனர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மக்க ளின் பொதுவான கோரிக்கைகளுக்கும் மனு அளித்தனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின், சிங்காநல்லூர் பகுதிச் செய லாளர் வி.தெய்வேந்திரன் கூறுகையில், இந்த முகாமில் பொதுமக்கள் வைக்கும் சிறுசிறு கோரிக்கைகளை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருகிறார்கள். ஆனால் பெரும் பாலான மக்கள் பட்டா மாறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு தான் அதிகம் வந்துள்ளனர். பட்டா மாறுதல் வருவாய்துறை, நிலஅளவைதுறை, வாட்டாச்சியர் அலுவலகம் என இல்லா மல் ஒரே வளாகத்தில் ஒரேமனுவின் கீழ் மக்களின் அலைச் சலை தவிர்க்கும் விதமாக கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும், என்றார்.
பாலஸ்தீனம், காஷ்மீரில் நடப்பது என்ன? இன்று ஈரோட்டில் சிறப்பு கருத்தரங்கம்
ஈரோடு, ஜன.5- பாலஸ்தீனம், காஷ்மீரில் நடப்பது என்ன? மற்றும் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு விழா சிறப்பு கருத்தரங்கம் சனியன்று (இன்று) ஈரோட்டில் நடைபெறுகிறது. ஒன்றிய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறித்தது. 370வது பிரிவு மற்றும் 35ஏவையும் நீக்கியது. சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவில்லை. கடந்த 4 ஆண் டுகளாக காஷ்மீரத்தில் நடப்பது என்ன, பாலஸ் தீனத்தை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல் ஆகியவை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு - பூந்துறை சாலை ஏ.எம்.மஹாலில் நடைபெறுகிறது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. இக்கருத்தரங்கத்தில், மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் யூசுப் தாரிகாமி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சத்துணவு அறையை சேதப்படுத்திய யானைகள்
உதகை, ஜன.5- அரசு பள்ளி சத்துணவு அறையை காட்டுயானைகள் உடைத்து, அங்கிருந்த சமையல் பொருட்களை தூக்கிச் சென்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் சத்துணவு சமையல் பொருட்கள் இருப்பு அறை உள்ளது. இந்நிலையில், வியாழனன்று இரவு புதர் பகுதியில் முகாமிட்டிருந்த மூன்று யானைகள் பள்ளி வளாகத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து சத்துணவு பொருட்கள் இருப்பு அறை கதவை, உடைத்து ஒரு மூட்டை அரிசியை தூக்கிச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானைகளை அங்கிருந்து துரத்தினர். மூன்றாவது முறையாக சத்துணவு சமையல் பொருட்கள் இருப்பு அறையை யானைகள் சேதப்படுத்தி, அரிசி மூட்டைகளை தூக்கி சென்றது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பள்ளி வளாகத்தை சுற்றிலும் யானைகள் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காந்தாரி மிளகாய் ரூ.400க்கு விற்பனை
உதகை, ஜன.5- உதகை மார்க்கெட்டில் காந்தாரி மிளகாய் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதி களில் காந்தாரி மிளகாய் விளைவிக்கப்படுகிறது. பச்சை, நீலம், ஊதா நிறங்களில் காணப்படும் இந்த மிளகாய் பழுத் தால் சிகப்பு நிறத்தில் மாறி விடுகிறது. அதில், கொழுப்பு, இரும்பு, கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதுதவிர வாதம், மூட்டு வலி, காசநோய், சளி போன்றவற்றை கட்டுப்படுத்தும் மருந்தாக உள்ளது. மேலும், காந்தாரி மிளகாய் கேரளா ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கூடலூர், பந்தலூரில் குறைந்த அளவில் விளைவிக்கப்படும் காந்தாரி மிளகாய் கேரளாவுக்கு அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உதகை மார்க்கெட்டில் கிலோ கணக்கில் விற்ப னைக்கு கொண்டு வரப்படும் இந்த மிளகாய் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜன.5- ஈரோடு சூரம்பட்டியில் உள்ள ஈரோடு கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் நாகமாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாநிலப் பொருளாளர் சதாசிவம் கலந்து கொண்டார். தமிழக குடிமைப் பொருள் வழங்கல் கழகத்தில் பணிபுரி யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறையின் கீழ் இயங் கும் ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு தனித்துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும். கடைகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கணக் கெடுப்பைத் செய்ததற்கு ஊக்கத் தொகையாக ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5 வழங்க வேண்டும். கடைகளில் நேரடி ஆட் சேர்ப்பு முறையை உறுதிப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு
உதகை, ஜன.5- கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசா ரணை பிப்.9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொட நாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்.24 ஆம் தேதி யன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளை யாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்த னர். இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்பின் மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்ப டைகள் அமைத்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. அப் போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தட யங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உற வினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தனிப் படை காவல்துறை 316 பேரிடம் மறு விசாரணை நடத்தி னர். கோவை சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையர் முருக வேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, தீவிர விசா ரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கனகராஜ் உயிரி ழப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை அவருடைய சகோ தரர் எழுப்பி கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்நிலையில் வெள்ளியன்று இந்த வழக்கு விசா ரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான், கூடுதல் துணை ஆணையர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றவா ளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்ஷீர் அலி ஆகியோரின் 8 கைப்பேசிகளின் உரையாடல்களைக் கொண்டு சேகரிக்கப்பட்ட 8 ஆயிரம் பக்கம் கொண்ட அறிக் கையை படித்து மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண் டும் என்பதால் சிபிசிஐடி காவல் துறை தரப்பில் கூடுதல் அவகா சம் கேட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் வழக்கை வரும் பிப்.9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வைக்கோல் கட்டு ரூ.275க்கு விற்பனை
தருமபுரி, ஜன.5- தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், தீர்த்த மலை சுற்றுவட்டார பகுதியில் வைக்கோல், மக்காச்சோ ளம் உள்ளிட்ட உலர் தீவனங்கள் தட்டுப்பாடால், கால்நடைக ளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், அரூர், மொரப்பூர் பகுதிகளுக்கு லாரிகளில் வைக்கோலை கொண்டுவந்து விற் பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறு கையில், ‘விழுப்புரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, திருவண் ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சரக்கு வாகனங்க ளில் வைக்கோலை எடுத்து வருகிறோம். ஒரு கட்டு வைக் கோல் ரூ.250 முதல் ரூ.270 வரை விற்பனை செய்யப்படுகிறது. அரூர் பகுதியில் தீவன தட்டுப்பாடால், வைக்கோல் விற்பனை ஜோராக நடக்கிறது, என்றனர். இதனிடையே, கால்நடைத் துறை சார்பில், மானிய விலையில் உலர் தீவன கிடங்கு திட்டத் தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப் போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முறைகேடு வழக்கில் சிக்கிய பெரியார் பல்கலை., துணைவேந்தர் பணியில் தொடர பேராசிரியர்கள் எதிர்ப்பு
சேலம், ஜன.5- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே பூட்டர் என்ற கல்வி நிறுவனத்தை துணைவேந்தர் ஜெகநாதன், அவரது கூட்டாளிகள் தொடங்கியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட துணைவேந்தர் ஜெகநாதன், தற் போது நிபந்தனை ஜாமினில் வெளியில் உள் ளார். 7 நாட்கள் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜெகநாதன், கடந்த 27-ம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத் திட்டார். இதன்பின் ஆஞ்சியோகிராம் செய்து கொண்டு தனியார் மருத்துவமனையில் தங் கிய நிலையில், புதனன்று வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து வியாழன்றும், வெள்ளி யன்றும் ஜெகநாதன் சூரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறை யில் அன்றாட பணிகளை ஜெகநாதன் கவ னித்து வருகிறார். இந்நிலையில், குற்ற வழக்கில் கைதான ஜெகநாதன், துணை வேந்தர் பணியை தொடர்வதற்கு சேலம் பெரி யார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.