districts

img

“வழிந்தோடட்டும் நொய்யல்” நூல் வெளியீடு விழா

கோவை, டிச.29- கோவையில் “வழிந்தோடட்டும் நொய்யல்” நூல் வெளியீடு மற்றும் ஒயி லாட்டம் அரங்கேற்ற விழா நடைபெற் றது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு மற் றும் செம்மலர் ஒயிலாட்டக்குழு சார் பில் ‘வழிந்தோடட்டும் நொய்யல்’ நூல்  வெளியீடு மற்றும் ஒயிலாட்டம் அரங் கேற்ற விழா சனியன்று கோவை மாவட் டம், டாடாபாத் ஸ்ருஷ்டி ஹாலில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு வழக்கறிஞர்  மு.ஆனந்தன் தலைமை வகித்தார். கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் நூலை வெளி யிட, தமிழ்நாடு தென்னை விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.காளப்பன், பத்திரிகையாளர் கா.சு. வேலாயுதம், பாரதி சின்னசாமி ஆகி யோர் பெற்றுக் கொண்டார். நூலா சிரியர் என்.வி.தாமோதரன் ஏற்புரை யாற்றினார். ஏஎல்எப் தலைவர் ஆர்.ராதாமணி ஒயிலாட்டத்தை துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் யு.கே.வெள்ளியங்கிரி, தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு தலைவர் என். ஆர்.முருகேசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சுதா, ஒயிலாட்டம் பொறுப்பா ளர் வி.நிஷா உட்பட பலர் பங்கேற்ற னர். முடிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் தனபால் நன்றி  கூறினார்.