காங்கேயம், மே 23 - காங்கயத்தில் தமுஎகசவின் கவிதைநூல் வெளியீட்டு விழா காங்கயம் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத் தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழ கத்தின் ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் நாச்சிமுத்து தலைமையில் நடை பெற்ற விழாவில் காங்கேயம் தமுகசவின் கிளைச் செயலாளர் க.காளியப்பன் வரவேற் றார். கவிஞர் கதிர்வேலின் மழைக்கு ஒரு மடல் கவிதை நூலை தமுஎகசவின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாத்தூர் லட்சுமி காந்தன் வெளியிட்டார். காங்கயம் கண் ணம்மா பெற்றுக் கொண்டார். தமுஎகசவின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வ ரன், காங்கயம் எழுத்தாளர் முத்து சுரேஷ் சிவகாசி தமுஎகசவின் செயலாளர் ஜெகன், காங்கயம் தமிழோசை நமசிவாயம், காங்க யம் வள்ளலார் மன்றம் மாணிக்கவேல், சமூக செயல்பாட்டாளர் காங்கயம் செ.தங்கவேல், ஆசிரியை விஜயலட்சுமி, தமுஎகசவின் திருப் பூர் மாவட்டத் துணைத் தலைவர் அங்கு லட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் கதிர்வேல் ஏற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, தமுஎகசவின் கிளைப் பொரு ளாளர் வழக்குரைஞர் நவீன் நன்றி கூறி னார்.