தருமபுரி, ஜூன் 22- நல்லம்பள்ளி அருகே பொதுச் சாலையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகலஹள்ளி ஊராட்சிக்குட் பட்ட அண்ணா நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களுக்கு சவுளூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 5 அடி அகலம் கொண்ட வழித்தடம் உள் ளது. இதனை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், குடியிருப்பு பகுதியிலி ருந்து சாலைக்கு வர முடியாத சூழ்நி லையில், மற்ற பகுதிகளைச்சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அலுவ லகங்களில் தொடர்ந்து, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்து வந்தனர். இருப்பினும் அதி காரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சேலம் – தருமபுரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட் டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் துறை யினர், பாகலஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஆகியோர் போராட் டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, நில அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை நீக்கி வழித் தடம் ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதி யளிக்கப்பட்டது. அதன்பேரில் பொதுமக் கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.