districts

img

“ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கக்கூடாது” கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் முழக்கம்

கோபி, அக்.2- ஊராட்சிப் பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, புதனன்று நடைபெற்ற  கிராமசபைக் கூட்டங்களில் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் கிருபா தலைமையில் புத னன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இளநிலை உதவி யாளர் சுதா, ஊராட்சி செயலர் சத்தீஸ்வரி ஆகியோர் முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில், ஊராட்சியில் பொது சுகாதா ரம், குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற் றும் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவா திக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரியூர் ஊராட்சியில் பெரும்பாலான பகுதி விவசாயம் சார்ந்தவைகளாகும். நக ராட்சியுடன் இணைத்தால் விவசாய நிலங்கள் குடியிருப்பு  நிலங்களாக மாறும். எனவே, ஊராட்சி பகுதிகளை கோபி  நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் எனக்கூறி  ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூபதி தலைமையில் பொது மக்கள் மனு அளித்தனர். இதேபேன்று, பா.வெள்ளாளபாளை யம் ஊராட்சி மன்றத் தலைவர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி இள நிலை உதவியாளர் ராதாமணி, ஊராட்சி செயலர் நாகமணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திலும், வெள்ளாளபாளை யம் ஊராட்சியை கோபி நகராட்சியுடன் இணைப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் எனக்கூறி பொது மக்கள் முழக்கங்களை எழுப்பினர். கலிங்கியத்தில் ஊராட்சி  மன்றத் தலைவர் கோகிலா ராமச்சந்திரன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், ஊராட்சிக்குட்பட்ட நாகர்பாளையம் பகு தியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும் என  வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.