districts

img

குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்: முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம்

உதகை, ஜூலை 3- கனமழையால் குடியிருப்பு களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களில் தஞ்சமடைந்தனர்.   நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விவசாயத் தோட்டங்கள் மற்றும் சாலைகள், குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நெலாக்கோட்டை அருகே கூவச் சோலை என்ற பகுதியில் சாலை ஓரம் தாழ்வான இடத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டு தோறும் பருவமழையின் போது மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்பு களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலை யில், செவ்வாயன்று பெய்த கன மழையில் சாலையோர விரிசல்கள் வழியாக மழை நீர் கசிந்து குடியி ருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால், பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளின் முன்புறம் மற் றும் பின்புறப் பகுதிகளில் மண்ச ரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது.  மேலும், பல வீடுகள் மண்  சரிவால் விரிசலடைந்து குடியி ருக்க முடியாத நிலைக்கு மாறி உள் ளது. இதனால், இப்பகுதி பொது மக்கள் அச்சத்துடன் குடியிருந்து வருகின்றனர். இதில், பத்து வீடுக ளைச் சேர்ந்த 62 பேர் தற்காலிக  நிவாரண முகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இதில், நான்கு பேரின் வீடுகள் முழுமையாக இடிந்து விழும் நிலையில் தொங்கியபடி நிற்கிறது. ஆண்டுதோறும் பருவ மழையின் போது தங்கள் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், சாலை யிலிருந்து மழை நீர் வழிந்தோட ஏது வாக இருந்த கால்வாய்கள், நெடுஞ் சாலைத்துறையினரால் மூடப்பட் டுள்ளது. எனவே அதை முறையாக திறந்துவிட்டு மழை நீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோட கால்வாய் வசதி ஏற்படுத்தினால், இந்த அளவு பாதிப்புகள் இருக்காது என இப்ப குதி பொதுமக்கள் தெரிவிக்கின்ற னர். மேலும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண் டும் என்றும் வலியுறுத்தி உள்ள னர்.