districts

img

ஏற்காடு பகுதியில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆவேச போராட்டம்

சேலம், ஜன.7- ஏற்காடு பகுதியில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து அப்பகுதியில் போலீ சார் குவிக்கப்பட்டனர்.  சேலம் மாவட்டம், ஏற் காடு ஏழைகளின் ஊட்டி என  அழைக்கப்படுகிறது. இங்கு  சுற்றுலா பயணிகள் அதிக ளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏற்காட்டை அடுத்த கொட்டச் சேடு முதல் அரங்கம் முதல் சாலை அமைப் பதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே 18 கிராமங்கள் உள்ள  செந்திட்டு வழியாக சாலை அமைப்பதற்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இரு கிராமம் மட்டுமே உள்ள நார்தஞ்சேடு வழியாக சாலை அமைப்பதற்கு அளவிடும் பணியை நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் துவங்கி உள் ளனர். இதையறிந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர்.ஆனால் போலீசார் அனுமதி மறுத்துடன் மிரட்டும் தொனியில் பேசினர். இதனால் பொதுமக்கள் போலீசா ருடன் வாக்குவாததில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.