சேலம், ஆக.2- ஆத்தூரை அடுத்த புங்கவாடி ஊராட்சியில் சீராக குடி நீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி ஊராட்சியில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் சில இடங்களில் குறைவாக வருகிறது. எனவே, சீரான முறையில் குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் வியாழனன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத் தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஊரக காவல் நிலைய போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்தை மேற்கொண்டனர். அப்போது, குடிநீர் விநியோகம் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தனர். அதனையேற்று பொது மக்கள் மறியலிலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்ற னர்.