districts

img

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம்

சேலம், ஆக.19- சர்வாதிகார குற்றவியல் சட்டங் களை திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில், சேலம் அஸ்தம்பட்டி பகுதி யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மோடி தலைமையிலான ஒன்றிய  அரசு அமல்படுத்தியுள்ள சர்வாதிகார குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். மோட்டார் தொழிலை அழிக் கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை  அமல்படுத்தக்கூடாது. தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில், சேலம் மாவட்டம், அஸ் தம்பட்டி பகுதியில் ஞாயிறன்று மாலை  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே. தியாகராஜன் தலைமை வகித்தார். இதில் சேலம் திமுக மத்திய மாவட் டச் செயலாளர் ரா.ராஜேந்திரன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கட பதி, பி.பன்னீர்செல்வம், தொமுச மாவட் டச் செயலாளர் பொன்னி.பழனியப்பன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், மாவட்டத் தலைவர் டி.உதய குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.முருகன், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் பி.கணேசன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் எம்.நடராஜன், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் வி. பாலு, ஏஐயூடியூசி மாவட்டத் தலைவர் பி.மோகன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன் உட்பட பலர் சிறப்புரையாற்றி னர் இதனிடையே, வி.பி.சிந்தன் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.