districts

குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

தருமபுரி, ஜூன் 18- குழந்தைகள் மீதான வன்முறையை  தடுத்து நிறுத்த வேண்டும் என வலியு றுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில், தருமபுரியில் மக் கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சமீப காலமாக குழந்தைகள் மீதான  வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தை கள் மீதான வன்முறை வீடுகளில், பள்ளி களில், பொது இடங்களிலும் ஏதாவது ஒரு நிலையில் வன்முறை சம்பவம் நடந்து வருகிறது. குழந்தைகள் மீதான  வன்முறையை தடுக்க, அரசும், சமூக மும், கூடுதல் பொறுப்போடும் அக்கறை யோடும் செயல்பட வேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை சம்ப வத்தில் காவல்துறை உரிய சட்டபிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்வதும், குற் றாவாளிகளுக்கு தண்டனை கிடைக் கும் வரை தொடர் கவனம் செலுத்துவ தும், மருத்துவ பரிசோதனை அறிக்கை களை உத்தரவாதப்படுத்தி நீதிமன்றத் தில் உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக ளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக் கும் வகையில், காவல்துறை செயல்பட  வேண்டும். மேலும், குழந்தைகள் மீதான வன்முறை நடக்க காரணமாக இருக்கும் போதைப்பொருட்களை முற் றிலுமாக ஒழிக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாலி யல் கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் குழந்தைகள் நல  ஆணையத்திற்கு தலைவரை உடனடி யாக நியமிக்க வேண்டும். குழந்தைகள்  மகிழ்ச்சியாக வாழ அரசும், பெற்றோ ரும், சமூகமும் இணைந்து குரல் எழுப்ப  வேண்டும் என அழைப்பு விடுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழு வதும் ஜூன் 17 முதல் 22 ஆம் தேதி வரை  மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக தருமபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு, மாதர் சங்க  மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை  வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர்  ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே. சுசிலா, தருமபுரி ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, ஆகியோர் கலந்து கொண்டனர்.