நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் முதலை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்தாராபுரம், பிப்.15- தாராபுரம் நகராட்சி நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் முதலை நடமாட் டம் என பரவும் தகவலால் பொதுமக் கள் அச்சத்தில் உள்ளனர். அமராவதி ஆறு உடுமலை பேட்டை அமராவதி அணையில் துவங்கி தாரா புரம் வழியாக கடைமடை பகுதியான கரூர் சென்று அடைகிறது. இந்த பழைமை வாய்ந்த அமராவதி ஆற்றில் தினசரி குளிப்பதற்காகவும், துணி துவைப்பது, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஆற்றில் இறங்கி தண் ணீரில் நீந்தி பொழுது போக்குவது வாடிக்கையாகும். இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் தாராபுரம் அடுத்த சீத்தக்காடு பகுதி மற் றும் தாளக்கரை பகுதியில் முதலை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் இப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் தாராபுரம் நகராட்சி நீரேற்றும் நிலையம் உள்ள தடுப்பணை பகுதியில் முதலை நீந்தும் புகைப்ப டத்தை சமூக வலைத்தளங்களில் பதி விட்டனர். மேலும் இதை உறுதி செய்யும் வகையில் தாராபுரம் நகராட்சி சார்பில் நகராட்சி நீரேற்று நிலை பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதால் அப்ப குதிக்கு செல்ல வேண்டாம் என அறி விப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால் தாராபுரம் பகுதி பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.