அவிநாசி, நவ.8- திருமுருகன்பூண்டி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதி யில் அமைந்துள்ள டாப் லைட் சாலையை சீரமைக்க எதிர்ப்பு தெரி வித்த நகரமன்ற உறுப்பினரை கண் டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த முற்பட்டனர். அவிநாசி ஒன்றியம் திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட, தேவரா யன் பாளையம், உமையஞ்செட்டிபா ளையம் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் டாப் லைன் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த டாப் லைன் குடியிருப்பு சாலை வழியாக, அவிநாசி நகரப் பகு திக்கு செல்ல தேவராயம்பாளையம் இணைப்புச் சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை பழுதடைந்துள்ள தால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சாலையை சீரமைத்து தரு மாறு, 14 ஆவதுவார்டு நகரமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பி னர் தேவராஜன் சாலை பணிகளை புதுப்பிக்க முயற்சி மேற்கொண்டார். இந்த நிலையில் 1 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மகேஸ்வரி, சாலை யினை புதுப்பிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பாக சாலையினை புதுப்பித்து தருமாறு நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகம் சாலை பணிகளை தொடரப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து சாலை பணிகளை செவ்வாய்க்கிழமை துவங்கும் போது பணி நடைபெறக் கூடாது என்று மீண்டும் 1 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள் போராட் டம் நடத்த முற்பட்டனர். இத்தகவல் அறிந்த காவல்துறை யினர், நகராட்சி ஆணையர்,நகர மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் தேவ ராஜன் சாலையினை புதுப்பித்து தருமாறு வலியுறுத்தினார். இதையடுத்து நகராட்சி ஆணை யர் இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர், சாலை யினை புதுப்பிக்கும் முயற்சியினை தடுத்து நிறுத்த கூடாது என கூறியதை தொடர்ந்து. எதிர்ப்பு தெரிவித்த நகர மன்ற உறுப்பினர் கலைந்து சென் றார். மீண்டும் சாலை பணிகள் தொடங்கியது.