districts

img

கோவையில் கிணற்றை காணோம் ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்

கோவை, ஜன.9- பேரூர் அருகே வடிவேலு பாணியில் கிணற்றை காணோம் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள் ளனர். கோவை, பேரூரை அடுத்த தீத்திபாளையம் அருகே உள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர். அம்மனுவில், தீத்திபாளையம், விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இதனை போலி  ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வரு கின்றனர். மேலும், மனைப்பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே, ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு, கம்பி வேலியிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.