ஈரோடு, செப்.25- அனைத்து இந்து பெண்களுக்கும் எதிரா னது தான் பொது சிவில் சட்டம் என ஈரோட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரி யர் அருணன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார் பில் ஈரோட்டில், பொது சிவில் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்ப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மாநில ஒருங்கிணைப்பாளர் அருணன் பேசுகையில், தில்லி செங்கோட்டையை எத்த னையோ மன்னர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், இந்த நாட்டின் விவசாய மக்கள் முற் றுகையிட்டது போல அத்தனை நாட்கள், 150 உயிர்களைப் பலி கொடுத்து நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை தில்லி கண்டதில்லை. சுநத்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயல் மகாத்மா காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது. அவர் இந்துமகா சபா, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். இரண்டாவது பயங்கரவாதச் செயல் பாபர் மசூதியை இடித்தது. 450 ஆண்டு காலம் வழிபாட்டுத்தலமான மசூதியை இடித்த வர்கள், மற்றவர்களை பயங்கரவாதி என்கின்ற னர். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என்று தான் சொன்னார்கள். ஆனால், மாநில அந்தஸ்தை பறிப்போம் என சொல்லவில்லை. பாஜக ஆட்சியில் இந்தியா வில் ஒரு மாநிலம் இல்லை. ஆனால், நாம் தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி கேட்டுக் கொண்டி ருக்கிறோம். நாளை தமிழ்நாடு, கேரளம் மாநில மாக இல்லாமல் போகலாம்.
பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரா னது. அதேசமயம் இந்துக்களுக்கும் எதிரானது. அரசியல் சாசனத்தில் பொது சிவில் சட்டம் உ.ள் ளது. ஆனால், அது வழிகாட்டும் நெறிகள் பகுதி யில் உள்ளது. அது அரசைக் கட்டுப்படுத்தாது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற அவ சியம் இல்லை. பொது கிரிமினல் சட்டம் உள்ளது. ஒரு கொலை நடந்தால் இவன்தான் கொலை யைச் செய்தானா? என்று தான் பார்ப்பார்கள். அதற்கு முன்பு மனுதர்ம சாஸ்திரம் தான் கிரி மினல் சட்டமாக இருந்தது. வருண அடிப்படை யில் தான் தண்டனை வழங்கப்பட்டது. உதார ணத்திற்கு, பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகா லன் படுகொலை ஒரு சரித்திர நிகழ்வு. அதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. கொலை செய்தது ரவிதாசன் உள்ளிட்ட பிராமணர்கள் என்கிறது கல்வெட்டு. ஆனால், சினிமாவில் படுகொலை அல்ல தற்கொலை என மாற்றி விட்டனர். பிரா மணர்களை பாண்டிய உதவிகள் என்று மாற்றி விட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் நிலம் கைப் பற்றப்பட்டது. அது எவ்வளவிற்கு விற்கப்பட்டது என்ற விபரமும் கல்வெட்டில் எழுதப்பட்டுள் ளது. பழைய இந்து சட்டத்தில் குழந்தை திரு மணம், பலதார மணம் இருந்தது. சொந்த சாதிக் குள் திருமணம் நடக்க வேண்டும். ஆனால், சொந்த கோத்திரத்திற்குள் கூடாது என்றது. ஆனால். எல்லாரும் இந்துக்கள் என்கின்றனர். இந்துக்களே ஒன்று படுவீர் என சங்பரிவாரம் அழைக்கிறது. ஆனால், கோவில் கருவறைக் குள் சென்றால், சூத்திரனே வெளியே போ, என் கிறார்கள். அந்த காலத்தில் அரபு மண்ணிலும் பல சண்டைகள் நடந்தன. அதனால் அங்கே ஆண் களின் எண்ணிக்கை குறைந்தது. பெண்கள் எண் ணிக்கை அதிகமானது. பெண்களுக்கு வாழ்வு தர வேண்டும் என்ற நோக்கில், பல தர மணம் செய்து கொள்ளலாம் என நபிகள் கூறினார். ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி மற்றும் யூத மதத்திற்கென இந்தியாவில் 5 சட்டங்கள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு சட்டம் இருக்கலாமா?
என்கிறார் பிரதமர். அந்த குடும் பம் விளங்குமா? என்று கேட்டார். அனை வருக்கும் ஒரே சட்டம் தேவைதான். ஆனால் அது எந்த சட்டம்? சடங்குகளே இல்லாமல் மதகுரு புத்தகத்துடன் மணமக்களிள் விருப்பத்தைக் கேட்டு திருமணத்தை பதிவு செய்வார். அப்படி நடக்கும் முஸ்லிம் சட்டத்தை ஏற்க தயாரா? அண்ணா முதல்வரான போது, பெரியார் கொண்டு வந்த சுயமரியாதை திருமணம், கம்யூ னிஸ்டுகள் கொண்டு வந்த சீர்திருத்த திரு மணங்களை சட்டமாக்கினார். அம்பேத்கருக்குப் பிறகு இந்து சட்டங்களை சிறிது சிறதாக நேரு நிறைவேற்றி விட்டார். தமிழ்நாட்டில் நாம் மனை வியை துணைவியாக்கி, இன்று இணையர் என்கி றோம். இப்படி நாம் முன்னேறும் பொழுது அவர் கள் அக்னிதான் சாட்சி என்கின்றனர். சமஸ் கிருதத்தில் மந்திரம் ஓதுவார்கள். அதில் மணப் பெண் முன்பு யார் யாருக்கெல்லாம் மனைவி யாக இருந்தார் என சொல்வார்கள். அதை தமி ழில் சொன்னால் மாப்பிள்ளை நொந்து போவார். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எதை பொது வாக்குவார்கள் எனத் தெரியவில்லை. எனவே கிறித்தவ, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அடித்தட்டு மக்களுக்கும், அனைத்து இந்து பெண்களுக்கும் எதிரானது பொது சிவில் சட்டம். பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்பார் கள். ஏனெனில், சங்கராச்சாரியாரின், ஆர்எஸ் எஸ்-ன் நிலைபாடு அது. பெண்கள் எப்பொது வேலைக்குச் சென்றார்களோ? அப்பொழுதே பெண்களின் ஒழுக்கம் போய் விட்டது என்ற வர்கள். எனவே, பொது சிவில் சட்டம் அனைத்து பெண் உரிமைகளையும் பறிக்கும். சமூக நீதிக்கு எதிரானது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
பிரதமருக்கு தேர்தல் பிரச்சாரத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. பத்திரிக்கையாளர் களை சந்திக்க மாட்டார். ஆனால், நேரு பத்தி ரிக்கையாளர்களை எளிதில் அணுகுவார். அத னால்தானோ என்னவோ நேருவை மோடிக்குப் பிடிப்பதில்லை. மாநில சட்டமன்ற தேர்தல்கள் தனியாகத்தான் நடக்க வேண்டும். அப்போது தான் மாநில பிரச்சனைகளைப் பேச முடியும். இந்தியா பல மொழி, மதங்கள், பண்பாடு, சரித்தி ரங்களைக் கொண்ட நாடு. அதனால் தான் மொழி வாரி மாநிலங்கள் உருவாகின. அந்த மாநில பிரச்சனைகள் அந்த மாநிலத்திற்கு தனியாக தேர்தல் நடந்தால் தான் பேசப்படும். ஆட்சி நடத்த முடியாமல் 355, 356 பிரிவின்படி மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி, ஆளுநர் மூலம் நடத் தப்படும். ஆட்சிகள் கவிழ்ந்தால் ரவி போன்ற ஆளுநர்கள் தான் நிரந்தரம். ஆர்எஸ்எஸ்சிற்கு மாநிலமே தேவையில்லை. நாளடைவில் மாநி லமோ, சட்டமன்றங்களோ தேவையில்லை என்ற நிலை வரும். ஒற்றை ஆட்சி முறை தான் வரும். அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவார் கள். ஜனாதிபதிக்கு தான் சகல அதிகாரம். ஜனா திபதி ஆட்சி வந்தால் சட்டமன்றங்கள் தேவை யிருக்காது. பின்னர் சர்வாதிகார ஆட்சி நடை பெறும். அதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுள் ளது. பொது சிவில் சட்டத்தை சட்ட ஆணையம் பாரத்துக் கொள்ளும். ஒரே நாடு ஒரே தேர்தல் கமிட்டிக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டுள் ளார். ஆகவே, அவர்களின் குவி மையம் நாக்பூ ரின் சர்வாதிகார ஆட்சி. அது இந்துராஷ்டிரம் என்பது போலப்படும்.
ஆனால், அது அனைத்து இந்துக்களுக்கான ஆட்சியாக இருக்காது. அந்த மனு ராஷ்டிரம் தான் வரும். அங்கே சூத்திரர்கள், பஞ்சமர்களுக்கு ஆபத்து. உங்களுக்கு எதற்கு கல்வி, வேலை. பெண்கள் பிறப்பிலே தாழ்வான வர்கள். உங்களுக்கு எதற்கு கல்வி எனும் பேராபத்து நம்மை நோக்கி வந்து கொண்டுள் ளது. அதேநேரத்தில் நம்பிக்கை இருக்கிறது. மக்களிடம் பேச வேண்டும். இத்தகைய உரை யாடல்கள் அரங்கிலும், அரங்கிற்கு வெளியே யும் நடக்க வேண்டும். இறுதியில் இந்தியா வெல் லும் என்றார். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் டி.திருச்செல்வம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெற்கு மாவட்டச் செயலாளர் முகமது ஆரிப், அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, தலைவர் இஸாரத்தலி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முக வள்ளி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டச் செயலாளர் எம்.அண்ணாதுரை, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.