சேலம், ஏப்.11- உயிரியல் பூங்காவில் கோடை வெப் பத்திலிருந்து விலங்குகள் பாதுகாத்துக் கொள்ள, ஸ்ப்ரிங் லிங்க் வாட்டர் குளியல் மற் றும் விலங்குகளுக்கு தர்பூசணி வெள்ளரி உணவு வழங்கும் புதிய சிறப்பு திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது கோடை வெப்பம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் ஏற்காடு மலையடி வாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் புள்ளிமான், கடாமான், குரங்கு, முயல், முதலை, மலைப்பாம்பு உள் ளிட்ட 222 வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளது. இந்த பூங்காவிற்கு, சேலம் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது, கோடை வெயில் தொடங்கி இருப்பதால் விலங்குகளை பராமரிப்பதில், அதிக கவனத்தை வனத்துறையினர் செலுத் தியுள்ளனர். விலங்குகளுக்கு குளிரூட்டும் வகையில் தண்ணீரை பீச்சி அடித்து வரு கின்றனர். இதில், கடாமண்கள் உள்ள இடத் தில் ஸ்பிரே லிங்க் வாட்டர் முறையில் எட்டு மணி நேரம் இடைவிடாமல் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளிக்கப்பட்டு விலங்குகள் குளிர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளது. இதே போல், புள்ளிமான்களுக்கும், குரங்குகளுக் கும் கோடை வெப்பத்தை குறைக்கும் வித மாக தர்பூசணி முலாம்பழம் வெள்ளரிக் காய் வழங்கப்பட்டு வருகிறது. இது, விலங்குகள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து எந்நேரமும் குளிர்ச்சி யாகவும் வெப்பத்தைத் தடுக்கும் உணவு களை உட்கொண்டு மகிழ்ச்சியாக சுற்றி வரு கிறது. வனத்துறையினரின் இந்த முயற்சி, சூழலியர்ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.