சேலம், ஜூலை 28- கன்னங்குறிச்சி பள்ளி மாணவ, மாணவி களுக்கு அமைச்சர் கே.என்.நேரு, ஞாயி றன்று விலையில்லா மிதிவண்டிகளை வழங் கினார். சேலம் மாவட்டத்தில் 2024 – 25 ஆம் கல்வியாண்டில் 26,199 மாணாக்கர்களுக்கு ரூ.12.63 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கன்னங்கு றிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயி றன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண் டிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசுகையில், இன்றைய தினம் (ஞாயி றன்று) கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள் ளியில் பயிலும் 128 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.19 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. வரும் 40 நாட்களுக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா மிதி வண்டிகளை வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது, என்றார். இந்நி கழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, டி.எம்.செல்வகணபதி எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆர்.அருள், மாவட்ட வருவாய் அலுவ லர் பெ.மேனகா, துணை மேயர் மா.சாரதா தேவி, முதன்மைக் கல்வி அலுவலர் மு.கபீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.