districts

img

திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 5- கொரோனா ஊரடங்கு காலத்தில் சிர மப்பட்டு வரக்கூடிய திருநங்கைகளுக்கு விருதுநகர் எல்ஐசி கிளையின் நிர்வாக அதி காரி விஜயலட்சுமி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையும் இணைந்து  அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினர். 

நிகழ்வில் சங்கத்தின் கிளை தலைவர் பாண்டிகுமார் தலைமை தாங்கினா.ர். தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், நகர் காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நிவாரண பொ ருட்களை வழங்கினர். மார்க்சிய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜுனன், நகரச் செயலாளர் ஜெயக்குமார், சிஐடியு மாநி லக் குழு உறுப்பினர் திருமலை, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரேணுகா தேவி, இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கிளை பொருளா ளர் குரு ராகவேந்திரன், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக ஓய்வு பெற்றோர்  அமைப்பின்  தலைவர்களில் ஒருவரான கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;