districts

img

பாரபட்சமின்றி அனைவருக்கும் நலவாரிய அட்டை வழங்கிடுக

கோவை, ஆக. 3- ஊடகவியலாளர்களுக்கான நல வாரிய அட்டையை எவ்வித பாரபட்ச முமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோயம்புத்தூர் பத்தி ரிகையாளர் மன்றத்தின் சார்பில் ஊட கவியலாளர்கள் வழங்கினர். ஊடகவியலாளர்களுக்கான தமிழ் நாடு அரசு பத்திரிகையாளர் நலவா ரிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடை பெற்றது. ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று ஊடக வியலாளர்களுக்கு வழங்கினார். இந் நிகழ்வில், கோவை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில் அண்ணா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, இந்த நல வாரிய அடையாள அட்டை ஒரு பகுதி ஊடகவியலாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. பெரும்பகுதி ஊட கவியலாளர்களுக்கு உரிய தகுதி இருந்தும், அரசின் ஆவனங்கள் இல் லாததால் பட்டியலில் இடம்பெற வில்லை.  இதனையடுத்து,  ஊடகவியலா ளர்களுக்கு நலவாரிய அட்டை வழங் கும் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச் சர் மு.பெ.சாமிநாதனிடம் கோயம்புத் தூர் பத்திரிகையாளர் மன்றத்தின்  சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், விடுபட்ட அனைவருக்கும் நலவா ரிய அட்டை வழங்க வேண்டும். ஊடக வியலாளர்களுக்கான இரண்டாம் கட்ட வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.  முன்னதாக, அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் கோயம்புத்தூர் பத்தி ரிகையாளர் மன்றத்தின் தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் சீனிவாசன், தங்கராஜ், மன்றத்தின் முன்னாள் நிர் வாகிகள் குருசாமி, அ.ர.பாபு மற்றும்  சுதாகர் உள்ளிட்ட திரளான ஊடகவி யலாளர்கள் மனு அளித்து கூறுகை யில், ஊடகவியலாளர்களுக்கான நல வாரிய அட்டை வழங்குவதில் எவ் வித பாரபட்சமும் இன்றி வழங்கப் பட வேண்டும். களத்தில் பணியாற்று பவர்கள் மட்டுமன்றி, பத்திரிகையா ளர் அலுவலகத்தில் பணியாற்றும்  இணை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் வழங்க வேண்டும் என வ லியுறுத்தினர். இதனை கேட்ட அமைச் சர், இதுகுறித்து பத்திரிகையாளர் வாரியத்தில் விவாதம் நடத்தியுள் ளோம். அனைவருக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தார்.