சிஐடியு வலியுறுத்தல் சேலம், ஏப்.12- சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலு கைகளை அமல்படுத்திட வேண்டு மென சிஐடியு சேலம் ரயில்வே ஏற்று மதி, இறக்குமதி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்கு மதி தொழிலாளர் சங்கத்தின் 40 ஆவது ஆண்டு பேரவை, சங்கத்தின் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை பி.அல்லிமுத்து ஏற்றி வைத் தார். செயலாளர் ஏ.கோவிந்தன், பொரு ளாளர் எஸ்.பிரபு ஆகியோர் அறிக் கையை சமர்பித்து பேசினர். இதில், உதவித்தலைவர் பி.மதியழகன், உத விச்செயலாளர் எம்.சுந்தர், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட துணை செயலாளர் எஸ்.திருப்பதி, சேலம் ஜில்லா சுமை தூக் கும் தொழிலாளர் சங்க தலைவர் ஆறு முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். இக்கூட்டத்தில், ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் அனை வருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் களுக்கு பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல்படுத்திட வேண் டும். சேலம் மார்க்கெட், ஜங்சன் கூட் செட்களில் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு போதுமான அளவு ஓய்வு அறை, குடிநீர் வசதி போன்ற அடிப் படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தலைவராக ஆர்.வெங்கடபதி, செய லாளராக ஏ.கோவிந்தன், பொருளாள ராக பி.சக்திவேல் மற்றும் துணைத் தலைவர்கள், துணைச்செயலாளர் கள் உட்பட 9 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் உதவி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.