districts

img

வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கிடுக

 சேலம், ஆக.25- வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு  மனை வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அம்மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள குண்டூர், காடையாம்பட்டி டவுன், தும்பிப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைகள் வழங்க வேண்டும். மேட்டூர் குடிநீரை கள்ளிக்காடு பகுதி களுக்கு வழங்க வேண்டும். காடையாம் பட்டி தாலுகாவில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். கள்ளிக்காடு, சின் னேரிக்காடு, பூசாரிப்பட்டி, தாராபுரம், பெரிய  ஆண்டிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதி களுக்குட்பட்ட மக்களுக்கு விளைநிலங் கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன் தலைமை ஏற்றார்.  கோரிக்கைகள் குறித்து, மாவட்டச் செய லாளர் மேவை. சண்முகராஜா உரையாற்றி னார். கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர்  எஸ்.முத்துசாமி, ஓமலூர் வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சின்ராஜ், கே.சேகர், ஏ. மகேஸ்வரி, ரவிக்குமார் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.