districts

img

நகைக்கடன்களை தள்ளுபடி செய்த இழப்பீடை வழங்கிடுக

சேலம், அக்.9- நகைக்கடன்களை தள்ளுபடி செய்ததால் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட இழப் பீடு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடி யாக வழங்க வேண்டும் என வலியு றுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்களில் உள்ள நகைக்கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. இதற்கான ஈவு தொகையை மாநில தொடக்க கூட்டு றவு வங்கிகளுக்கு தமிழக அரசு வழங்காததால் 100 கோடி ரூபாய்க்கு  மேல் பாக்கி உள்ளது. எனவே, தமி ழக அரசு தொடக்க வேளாண்மை கூட் டுறவு வங்கிகளுக்கு வழங்க வேண் டிய 100 கோடி ரூபாய் நிதியை உட னடியாக வழங்க வேண்டும். சங்கங் களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடை முறை பிரச்சனைகளை அகற்றி  அனைவருக்கும் மூன்றாண்டுக ளுக்கு ஒரு முறை பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி  அனைத்து பணியாளர்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித் தார். இதில் மாநில துணைத்தலைவர் மாரிமுத்து, அமைப்பு செயலாளர் சின்ன தம்பி, மாவட்டச் செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.