districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வணிககடன் நிபந்தனையில்லாமல் வழங்கிடுக

மாற்றுத்திறனாளிகள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

உடுமலை, ஜூலை 20-  மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வணிககடன் வழங்க வங்கிகள் எவ்வித நிபந் தனைகளை விதிக்ககூடாது என உடுமலை யில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க திருப்பூர் மாவட்ட மாநாடு  வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 4  ஆவது மாநாடு உடுமலை தேஜஸ் மஹாலில் டி. லட்சுமணன் நினைவரங்கத்தில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயலாளர் டி. வில்சன் உரையாற்றினார். வேலையறிக் கையை மாவட்ட செயலாளர் பா.ராஜேஷ் முன்வைத்தார்.  மாற்றுத்திறனாளிகளும் சிறு, குறு தொழில்கள் தொடங்க வணிக கடன் வழங்க எவ்வித நிபந்தனைகளையும் வங்கிகள் விதிக்காமல் கடன் வழங்கவேண்டும். கடும் ஊனமுற்றோர்களுக்கு மாற்றுத்திறனாளித் துறை மூலம் உதவித்தொகை ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய – மாநில அரசுகள்  கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இதில், மாவட்ட தலைவராக டி. ஜெயபால், மாவட்ட செயலாளராக பா. ராஜேஷ், மாவட்ட பொருளாராக எ.மாலினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் உரையாற்றி னார்.

அணைகளின் நீர்மட்டம் விவரம் வருமாறு:

சோலையார் அணை நீர் மட்டம்: 161.33அடியாக உள் ளது. நீர்வரத்து 3865.88  கன அடியாகவும், வெளி யேற்றம் 4596.20க.அடியாக வும் உள்ளது.  பரம்பிக்குளம்  அணை நீர் மட்டம்: 70.50/72 அடியாக உள்ளது. நீர்வரத்து: 2779 க.அடி.வெளியேற்றம்:1300 க.அடி. ஆழியார் அணை நீர் மட் டம்: 107.70/120அடி. நீர் வரத்து:1198 கன அடி. வெளி யேற்றம்: 159 கன அடி.  திருமூர்த்தி அணை  நீர் மட்டம்: 28.74/60அடி நீர் வரத்து: 25 கன அடி வெளி யேற்றம்: 27கன அடி.  அமராவதி அணை  நீர் மட்டம்: 88.42/90அடி. நீர் வரத்து: 1884 கனஅடி வெளியேற்றம்: 1926 கன அடி.

விபத்தில் இறந்த தொழிலாளியின்  குழந்தைகளுக்கு மாத உதவித் தொகை

திருப்பூர்,  ஜூலை 20 – விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு இ.எஸ்.ஐ. நிறுவனம் மாத உதவித் தொகை வழங்க உத்தரவு  பிறப்பித்துள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டு (இ.எஸ்.ஐ.) நிறுவனத்தில்  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (39)  என்பவர் ஸ்ரீ ஜெயந்தி கிளாத்திங் கம்பெனியில் டெய்லராக  வேலை செய்து வந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  27 அன்று பணி முடிந்து அவரும், அவரது மனைவி மகாலட் சுமியும் வீட்டிற்குச் செல்லும் வழியில் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில்  இருவரும் உயிரிழந்தனர். இஎஸ்ஐயில் பதிவு பெற்ற தொழிலாளியாக அர்ஜூனன் இருந்ததால், அவருடைய குழந்தைகள் கோகுல் (17), கீர்த் திகா (16) ஆகிய இருவருக்கும் நாளொன்றுக்கு ரூ.199.20 வீதம் மாதம் ரூ.5,976 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப் படும். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உள்ள நிலுவைத்  தொகை ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 074 வங்கியில் வரவு வைக் கப்பட்டது. அர்ஜூனன் மறைவின்போது இறுதிச்சடங்கிற்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது.  திருப்பூர் இஎஸ்ஐ கிளை மேலாளர் திலீப், நிறுவன உரிமை யாளர் டி.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில் அர்ஜூன னின் குழந்தைகளுக்கு உதவித் தொகை அட்டை வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் காசாளர் தேவராஜ், அலுவலக ஊழியர்  நடேஷ் மற்றும் சந்தேஷ்வர்குமார் உடனிருந்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உடல் மீட்பு

அவிநாசி, ஜூலை 20-  குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோயில்  கட்டுமானப் பணியின்போது சிமென்ட் லாரி கவிழ்ந்து விபத் துக்குள்ளானதில், பள்ளத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி யின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே அரண்மனை மாரியம்மன் கோவிலில் கட்டுமான பணி நடைபெற்று வருகி  றது. இதில் கோயில் மண்டபம் அமைப்பதற்காக தூண்  அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.  அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் குழிக் குள் இறங்கி கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப் போது பெருமாநல்லூரில்லிருந்து கான்கிரீட் சிமெண்ட் கலவை கொட்ட வந்த லாரி, குழிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள் ளானது. குழிக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்  உடனடியாக மேலே ஏறி உயிர் தப்பினர். இருப்பினும் திங்க ளூர் பாப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த  கட்டடத் தொழிலாளி ராமசாமி(42)  லாரியின் அடியில் மண் ணுக்குள் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து செவ்வாய்க் கிழமை இரவு 7 மணி முதல் குன்னத்தூர் காவலர்கள் மற்றும்  தீயணைப்புத்துறையினர்  கிரேன் மூலம், லாரியையும், உள் ளே இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமசாமியும் மீட்பதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இரவு விடிய விடிய நடைபெற்ற  பணியையடுத்து, புதன்கிழமை அதிகாலை லாரிக்கு அடியில்  மண்ணுக்குள் சிக்கியிருந்த ராமசாமி உயிரிழந்த நிலையில்  மீட்கப்பட்டார். இது  குறித்து குன்னத்தூர் காவலர்கள் வழக் குப்பதிவு செய்து கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர் சந்திரன்,   லாரி ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.2.55 லட்சம் கடன் பெற்று மோசடி

அவிநாசி, ஜூலை 20 - சேவூரில் தனியார் குழுக்களில் ரூ.2.55 லட்ச கடன் பெற்று  மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான தாய் மற்றும் மகளை  போலீஸார் தேடி வருகின்றனர். சேவூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் காவல்  நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது : சேவூர்,  சந்தையப்பாளையம் பகுதியில் தாய் தனபாக்கியம்,  மகள்  கௌரிசுரேஷ் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுடன்  சேவூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இணைந்து பல்வேறு தனியார் நிதி நிறுவன குழுக்களிடம் கடன் பெற்று திருப்பி  செலுத்தி வந்ததோம். ஆனால் தாய் தனபாக்கியம், மகள் கௌரிசுரேஷ்  மட்டும் கடனை திருப்பி செலுத்தாமல் தாம தித்து வந்தனர். தற்போது இவர்கள்  எங்கள் பகுதியை விட்டு  தலைமறைவாகி விட்டனர். இதனால் தனியார் நிதி நிறுவன  குழுதாரர்கள், ஜாமீன் கொடுத்த எங்களிடம் பணம் கேட்டு  தொந்தரவு செய்வதால், மன உளைச்சலுக்கு ஆளாகி குடும் பத்தில் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஆகவே 9 க்கும் மேற்பட்ட குழுவில் ரூ.2.55 லட்சத்திற்கு மேல் கடன் பெற்று தலைமறை வான தனபாக்கியம், கௌரிசுரேஷ் ஆகியோர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். புகாரை பெற்றுக் கொண்ட சேவூர் போலீசார் தீவிர விசாரணையில்  ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: தனியார் மருத்துவமனையை அபகரிக்க முயன்ற விவகாரம் வழக்கறிஞர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

கோவை, ஜூலை 20- தனியார் மருத்துவமனையை அபகரிக்க முயன்ற விவகா ரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் என்பரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி போலிசார் சோதனை மேற்கொண்டனர். கோவை காந்திபுரத்தில் எல்லன் மருத்துவமனையை 50  ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவர் ராமச்சந்திரன் (72), என் பவர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், மருத்துவமனையை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர் (54), என்பவருக்கு ஒப்பந்த  அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். மாத வாடகை  15 லட்சம் ரூபாய் என பேசப்பட்டது. ஆனால், 4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை வாடகை பாக்கி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் உமா சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ரூ.100 கோடி மதிப்புடைய மருத்துவமனை அபகரிக்க முயல் வதாக உமா சங்கர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் மருத் துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைய டுத்து உமாசங்கர்  கைது செய்யப்பட்டார். பின்னர், பிணை யில் வெளியில் வந்த அவர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்துட்டு திரும்பியபோது, கண்ணப்ப நகர் பகுதி யில் நடைபெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவ மனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதன்பின் தனியார் மருத்து வமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர் பாக மருத்துவமனை உரிமையாளர் ராமச்சந்திரன் உட்பட 13 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவரை போலிசார் தேடி வருவதாக கூறப் படுகிறது. இந்நிலையில், சிபிசிஐடி போலிசார், சாய்பாபா  காலனி, நாராயண குரு சாலையில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான விடுதி, அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியி ருப்பு, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம்

உதகை, ஜூலை 20- நீலகிரி மாவட்டத்தில் காவல் துறையினர் தங்களது வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் என்ற ஸ்டிக்கர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில், போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தக்கூடாது, அலுவலக வாகனங்களில் மட்டுமே போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும். எனவே அனைத்து போலீசாரும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.  இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர். கோத்தகிரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் 3 கார்கள், 14 இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்த போலீஸ் ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். இதேபோல மற்ற காவல் நிலையங்களிலும், காவலர்களின் சொந்த வாகனங்களில் ஒட்டியுள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

போதை வெறியின் உச்சம் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

கோவை, ஜூலை 20- கோவை மாவட்டம், தடாகம் 24 வீரப்பாண்டியை சேர்ந்த வர் ஆறுமுகம் (75). இவரது மகன் செந்தில்குமார் (37), வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடிப் பழக்கத்திற்கு அடிமையான செந்தில்குமார், தந்தையிடம் மது மற்றும் பீடி வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ஆறுமுகம் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த செந்தில்குமார், தந்தையை வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தை வெட்டி விட்டு அங்கிருந்து  சென்றுள்ளார். பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அக்கம்  பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி ராணி தடாகம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்தடை

நாமக்கல், ஜூலை 20- நாமக்கல் துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை நாமக்கல், நல்லி பாளையம், அய்யம்பாளை யம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகு ரம்பட்டி, வசந்தபுரம், வேப்ப நத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம், சின்ன  முதலைப்பட்டி ஆகிய பகுதி களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.