கோவை, ஆக 1- இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதனன்று அன்னூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னூர் பயணியர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அண்மை யில் கட்டண உயர்வை அறிவித்தது. இதனை யடுத்து, ஏராளமானோர் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் எல்க்கு மாறி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் விற் கப்பட்டன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறு வனத்தை வலிமைப்படுத்தி தரமான தொலைத்தொடர்பு வலிமைப்படுத்தவும், 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை நாடு முழுவ தும் வழங்கிட வேண்டும் என்கிற கோரிக் கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் பிரதீப் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் அர்ஜுன், ஒன்றியச் செயலாளர் ரமேஷ்,ஜெகதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.