districts

img

வாய்பேசாதோர், காதுகேளாதோருக்கு 1 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிடுக

தருமபுரி, ஆக.27- வாய்பேசாதோர்,காதுகேளாதோருக்கு அரசு பணிகளில்  1 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குமாறு தமிழ்நாடு காது கேளாதோர்-வாய் பேசாதோர் உரிமைக்களுக்கான சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு காதுகேளாதோர், வாய்பேசாதோர் உரிமை களுக்கான சங்கத்தின் பேரவைக் கூட்டம் ஞாயிறன்று தரும புரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்.நித்தியா தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் திருஞானம் வரவேற்றார். மாற்றுத்திறனாளிகள் சங்க அகில இந்திய பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி துவக்கி வைத்து பேசினார். காது கேளாதோர்- வாய்பேச முடியாத உரிமைகளுக்கான சங்கத் தின் மாவட்டச் செயலாளரும், மாநிலத் தலைவருமான ஜீவா, மாநிலச் செயலாளர் சொர்ணவேல் ஆகியோர் சங்க செயல் பாடுகள் குறித்து பேசினர்.  இக்கூட்டத்தில் காதுகேளாதோர், வாய்பேசாதோர்  புரிந்துகொள்ள கூடிய வகையில், மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் மற்றும் காவல் துறை அலுவலகம், மாவட்ட  தலைமை மருத்துவமனை, அனைத்து அலுவலகம் மற்றும்  பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடி யாக நியமிக்க வேண்டும். மாநில முழுவதும் காதுகேளாத,  வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் தொகுப்பு ஊதியத்தில்  வேலைபார்ப்பவர்களை அரசாணை எண் 151-ன் படி உடனடி யாக நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும். அரசு பணி களில் காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோருக்கு 1  சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறை  நிறுவனங்களில் காதுகளாதோர், வாய்பேசாதோர் அனைவ ருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி பணி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். காதுகேளாத, வாய்பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு இலவச வீட்டுமனை உடனே வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட காதுகேளாதோர், வாய்பேசாதோர் ஆகியோரை கடும் ஊன முற்றோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்கு மாதந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக நித்யா, மாவட்டச் செயலாளராக திருஞானம், பொருளாளராக மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.