கோவை, நவ.27- தனியார் நர்சிங் கல்லூரி நிர்வா கத்திடமிருந்து தங்களது சான்றிதழ் களை பெற்றுத்தர வேண்டும் என வலி யுறுத்தி மாணவிகள் இந்திய மாண வர் சங்கத்தினர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுது. கோவை மாவட்டம், ஈச்சனாரி பகு தியில் ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தில் இந்தியன் நர்சிங் கவுன் சில் (Indian nursing council - INC) உள்ளதாகக்கூறி மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தில் தமிழ்நாடு நர்சிங் கவுன் சில் (tamilnadu nursing council - TNC) மட்டுமே இருந்துள்ள நிலை யில், லட்சக்கணக்கில் பணத்தினை கட்டணமாக பெற்றுக்கொண்டு முத லாம் ஆண்டு சேர்க்கை நடத்தப்பட் டது. இதுசம்பந்தமாக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்ட போது, சரியான பதில் அளிக்காத தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப் பட்ட மனுவில், “எங்களது அசல் சான் றிதழ்களையும், கல்வி கட்டணத்தை யும் திரும்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மாணவர்கள் வலியுறுத்தி இருந்தனர். அதனைத்தொடர்ந்து ஒரேநாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கல்வி நிர்வா கத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த் தையில் மாணவர் சங்கத்தினர் ஈடு பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன் னதாக, ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன், மாநில செயற்குழு உறுப் பினர் கயல்விழி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஆசாத், ஹாரீஸ் உட்பட திர ளான மாணவர்கள் கலந்து கொண் டனர்.