கோவை,பிப். 1- இலவசமாக கல்வி தருகிறோம் என மாணவர்களை சேர்த்திவிட்டு தற் போது வசூல் வேட்டையில் தனியார் பள்ளி ஈடுபடுவதாக குற்றம்சாட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெற் றோர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், செட்டிபா ளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலே ஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூ னிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக் கான நிதி உதவியை அளித்து வருகி றது. இந்தப் பள்ளியில் கட்டணம் பெறாமல் இலவச கல்வி அளிக்கி றோம் என விளம்பரம் செய்யப்பட் டுள்ளது. இதனை நம்பிய பெற்றோர் களும், தங்கள் குழந்தைகளை சேர்த் துள்ளனர். இப்போது, ஆயிரக்கணக் கில் பணம் கேட்டு நிர்பந்தம் செய்வ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட் டண கொள்ளையில் ஈடுபடும் பள் ளியின் மீது நடவடிக்கை எடுத்து, எங் களது குழந்தைகளில் கல்வி பாதிக் காத வகையில் ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க வந்தனர். இது குறித்து அவர்கள் அளித் துள்ள மனுவில் தெரிவித்திருப்பதா வது, ஆரம்பத்தில் பள்ளியில் இலவச கல்வி தருவதாக கூறி உறுதியளித் தனர். அப்போது ரூ.100 மட்டுமே கட் டணமாக பெறப்பட்டது. பின்னர், ரூ. 300, ரூ.600, ரூ900 என ரூ1800 வரை கட்டணம் வசூலித்தனர். 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அதிகபட் சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்ட ணம் வசூலிக்கப்பட்டு, 2024-25 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை என கூறி குறைந்தபட்சம் ரூ30 ஆயிரத்திலி ருந்து அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூ பாய்வரை கல்வி கட்டணம் கேட்கின் றனர். கட்டணத்தைச் செலுத்த இய லாவிட்டால் பள்ளியில் இருந்து டிசி யை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சி யர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய் வதற்கான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்றனர்.