districts

img

பொய் வழக்கில் வழக்கறிஞர்கள் கைது: கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 17- மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர்களை பொய் வழக்கில் கைது செய்த என்ஐஏ நடவ டிக்கையை கண்டித்து கோவையில் வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய மோடி அரசு, அனைத்து அரசுத் துறைகளிலுல் தங்களுக்கு எதிரானவர்கள் என நினைப்பவர்களை பழிவாங்கும் கருவி யாக பயண்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வழக்கறிஞர்களின் ஜனநாயக, வாதாடும் உரிமையை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. சிஆர்பிசி, ஐபிசி சட்டங்க ளின் கீழ் வாதாடுகிற உரிமைகளை பறிக் கின்ற வகையில் என்ஐஏ விசாரணையற்ற வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்தொடர்ச்சி யாக, மதுரை வழக்கறிஞர்களான முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் ஆகியோர்  மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்குகளை திரும்பப்பெற்று நிபந்தனையற்ற விடுதலை செய்யக்கோரி யும் கோவை நீதிமன்ற வளாகத்தின் வாயில் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைகள் கழகம் உள்ளிட்ட சங்கத் தின் வழக்கறிஞர்கள் திரளானோர் பங்கேற்ற னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் மலரவன் தலைமை ஏற்றார். இதில், வழக் கறிஞர்கள் சக்திவேல், ஆறுச்சாமி, பாலமுரு கன், ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், வழக்கறிஞர் வெண்மணி நன்றி கூறினார்.