districts

img

கிரேன் மோதி கல்லூரி மாணவி இறப்பு ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்

பொள்ளாச்சி, அக்.30- கிரேன் மோதி கல்லூரி மாணவி இறப் பிற்கு காரணமான ஓட்டுநரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். பொள்ளாச்சி, மரப்பேட்டை வீதியை சேர்ந் தவர் அசோக் என்பவரின் மகள் சுஷ்மா (17). கல்லூரி மாணவியான இவர்  கடந்த 24ஆம்  தேதி உடுமலை சாலை தேர்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கிரேன் மோதிய தில் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி கிரேன் ஓட்டுநர் தப்பி ஓடினார். இவர் மீது பொள் ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்து கடந்த ஆறு நாட்களாகியும் கிரேன் ஓட்டுனரை காவல்துறையினர் இது வரை கைது செய்யவில்லை எனக்கூறி சுஷ்மா வின் உறவினர்கள் விபத்து நடந்த உடுமலை சாலை தேர்நிலையத்தில் திங்களன்று மறிய லில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரி மாணவி  மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர். இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சு  வார்த்தை நடத்தினர். ஆனால், கிரேன் ஓட்டு நரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என வாக்குவாத்தில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து அவ்வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் மாற் றுப்பாதையில் அனுப்பி வைத்து, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.