சேலம், டிச.23- பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், என வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள 106 மாத அகவிலைப் படியை வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு ஓய் வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென் சனாக ரூ.7800 வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் ஏ.நடராஜன் தலைமை வகித் தார். மாநில துணைத்தலைவர் ஆர்.சுப் பிரமணியம் கண்டன உரையாற்றினார். இதில் கூட்டமைப்பின் மாவட்டச் செய லாளர் சி.ராஜ்குமார், அரசு விரைவு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க நிர் வாகி மணிமுடி, போக்குவரத்து ஓய்வூ தியர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் அருணகிரி நன்றி கூறினார்.