districts

img

பொது விநியோகத்தை சீரழிக்க முயற்சிப்பதா? ஏஐசிசிடியு வினர் போராட்டம்

திருப்பூர், நவ. 20 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியாரி டம் விட்டு பொது விநியோகத்தை சீரழிக்கக் கூடாது என்று  வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநா யக அங்காடிகள், சுமை தூக்குவோர் மற்றும் பொதுத் தொழி லாளர் (ஏஐசிசிடியு) சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பல ஆண்டுகளாக வேலை செய்யும் சுமைப்பணி மற்றும்  தூய்மைப் பணியாளர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய  வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்வோ ருக்கு பிங்க் அட்டையை மாற்றி பச்சை அட்டை வழங்க வேண் டும், தொழிற்தாவாவில் வழக்கு தொழிலாளர் தீர்ப்பாயத் தில் உள்ள நிலையில், சுமைப்பணி, தூய்மைப் பணியில் அயல்பணி (அவுட் சோர்சிங்) விடக் கூடாது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி புதன்கிழமை திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏஐசிசிடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து ஏஐசிசிடியு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.