districts

img

ஒன்றிய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

கோவை, ஆக.8- மூன்று குற்றவியல் சட்டங் களை திரும்பப் பெற வலியுறுத் தியும், தொழிலாளர்களுக்கு விரோ தமாக செயல்படும் ஒன்றிய அரசை  கண்டித்து சட்ட நகல் எரிப்புப் போராட் டம் நடத்த அனைத்து மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவின் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. கோவை மாவட்ட அனைத்து  மத்திய தொழிற்சங்க அமைப்புக ளின் கூட்டு நடவடிக்கை குழுவின்  கூட்டம் வியாழனன்று சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.மனோக ரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும் 10 ஆம் தேதி யன்று துவங்கி 14 ஆம் தேதியன்று  வரை தொடர் போராட்டத்தை முன் னெடுப்பது என முடிவெடுக்கப் பட்டது. மேலும், 12 ஆம் தேதியன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் உள்ள பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு தேசியக் கொடியை ஏற்றி யும் உறுதிமொழி எடுத்தும், ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு விரோத மாக செயல்படும் ஒன்றிய அரசை  கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட் டத்தை எழுச்சியோடு நடத்துவது. மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாவட்டம் முழுவதும் பல் லாயிரக்கணக்கான மக்கள் மத்தி யில் துண்டு பிரசுரம் விநியோகித்து  பிரச்சார இயக்கம் மேற்கொள்வது.  ஆக. 14 ஆம் தேதியன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மேற் கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிறப்பு கருத்தரங்கம் நடத்து வது என கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலு சாமி நிர்வாகிகள் ஆர்.ராஜன், கே. ரத்தினகுமார், ஏழுமலை, ஆனந்த குமார், வி.பெருமாள், எஸ்.பி.சுப்ர மணியன், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், சி.தங்கவேல் எல்பிஎப் நாகர், வணங்காமுடி, எச்எம்எஸ் ஜி.மனோ கரன், எஸ்.தேவராஜன், ஐஎன்டி யுசி பி.சண்முகம், நேசமணி, எம்எல் எப் பழனிசாமி, ஏஐசிசிடியு பாலசுப் பிரமணியன், எஸ்டிடியு இப்ரா ஹிம், எல்டியூசி மணிகண்டன் உள் ள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.