districts

img

ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவா? ஆளுநரை கண்டித்து போராட்டம்

சேலம், டிச.29- ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலா ளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தி னர் பெருந்திரள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டு, கைதாகினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை யில் பணியாற்றி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை ஓய்வு பெறும் நாளில் வழங்க வேண்டும். குறிப்பாக 87 மாதங்க ளாக அகவிலைப்படியை வழங்காமல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், உத்தரவை அமல் படுத்தாத தமிழக அரசை கண்டித்தும், போக் குவரத்து தொழிலாளர்கள் மீதான உயர் நீதி மன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்த தமி ழக அரசை கண்டித்தும் தி ஸ்டேட் டிரான்ஸ் ஸ்போர்ட் மற்றும் டிரான்ஸ்போர்ட் கார்ப்ப ரேசன் ரிட்டட் எம்ப்ளாயிஸ் வெல்பர் அசோசி யேசன் சார்பில் தமிழகம் முழுவதும் 9  கோட்டங்களில் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது.  அதன் ஒரு பகுதியாக சேலம் போக்குவ ரத்து தலைமை  அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்தில், ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பணிக்காலத்தில் மர ணம் அடைந்த தொழிலாளர்களுக்கு சட்டப் படி வழங்க வேண்டிய பணிக்கொடை, வருங் கால வைப்பு நிதி, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை கடந்த 22 மாதங் களாக வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற போக்குவ ரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மண்டல தலைவர் பி.என்.பழனிவேலு தலைமை வகித் தார். இதில், சேலம் கோட்ட செயலாளர் அன் பழகன் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், மத்திய, மாநில  அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்பு களின் ஒருங்கிணைப்புக்குழு, ஓய்வுபெற்ற  பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம், அனைத் திந்திய அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் அமைப்பு ஆகிய சங்கங்கள் ஆதரவாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கோவை கோவை மண்டல போக்குவரத்து தலை மையகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் ஜீ.பழனிச்சாமி தலைமை வகித்தார். அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் சின்னச்சாமி வாழ்த் துரையாற்றினார். இதில், அமைப்பின் பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், நிர்வாகிகள் சேது ராமன், கிருஷ்ணராஜ், ஜெகநாதன், ஜெயரா மன், நடராஜன் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.