சேலம், பிப்.10- 100 நாள் வேலை திட்டத் தொழிலா ளர்களுக்குரிய சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும், என வலியு றுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். தமிழகம் முழு வதும் ஆறு வாரங்களுக்கு மேல் வழங் கப்படாமல் உள்ள 1065 கோடி ரூபாய் சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். 200 நாள் வேலையும், 600 ரூபாய் தினக்கூலியும் வழங்க வேண் டும். வீட்டுமனை கேட்டு விண்ணப்பித் துள்ள தலைவாசல், பட்டுத்துறை, நந்தக் கரை, தியாகனூர், புளியங்குறிச்சி, தேவியாங்குறிச்சி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கூட்டு குடும் பத்தில் உள்ள வீடுகளற்ற ஏழை மக்க ளுக்கு இலவச வீட்டு மனை வழங்கி, அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசல் வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டச் செயலாளர் சி.மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட் டச் செயலாளர் ஜி.கணபதி, மாற்றுத்திற னாளிகள் சங்க செயலாளர் எம்.குண சேகரன், சிபிஎம் ஆத்தூர் தாலுகா செய லாளர் ஏ.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.