கோவை, ஆக. 10- தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து, கோவையில் சனியன்று பல்வேறு அமைப்பினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீனவர்களை கொடூரமாக கொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து, கோவை காந்திபுரத்தில் உள்ள தம்ரோ பர்னிச்சர் கடையை தந்தை பெரியார் திராவிட கழகம் தலைமையில் பல் வேறு அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதில்,இலங்கை அரசு மீது இந்திய ஒன்றிய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தொடர்ந்து தமி ழக மீனவர்களை கொலை செய்யும் இலங்கை கடற் படை மீது தமிழ்நாடு அரசு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த கொடூர செயலுக்கு ஆதரவாக செயல் படும் அனைத்து நிறுவனங்களும் தண்டிக்கப்பட வேண் டும் என்றும், இலங்கையை சேர்ந்த நிறுவனமான தம்ரோ பர்னிச்சர் கடையை நிரந்தரமாக மூடக்கோரி முற்றுகை யிட்டனர். இதில், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமை வகித் தார். தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மே 17 இயக்கம், தமிழ் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம் உள் ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.