உதகை, ஜூன் 25- கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடைகள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து கூடலூ ரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மறியலில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், பாடந்துறை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். இரவு நேரங்களில் மக்கள் வாழக்கூடிய குடி யிருப்புகளின் அருகே காட்டு யானைகள் உலா வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு வனப்பகுதி யிலிருந்து வெளியேறிய பாடந்துறை பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் குடியிருப்புகள் மற்றும் கடை களை உடைத்து சேதப்படுத்தி சென்றது. நல்வாய்ப்பாக இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வராததால் பெரும் அசம்பாவிதமானது தவிர்க்கப் பட்டது. இதனையடுத்து யானைகள் ஊருக்குள் வரு வதை தடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டுமென வனத்துறையினரை கண்டித்து கூடலூரில் இருந்து கேரளம் செல்லும் சாலையில் பொதுமக்கள் புத னன்று மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் துறையி னர் காவல் துறையினர் பொதுமக்களிடம் வன விலங்குகள் வராமல் தடுப்பதாகவும், தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவதாக உறுதி அளித்ததைய டுத்து போராட்டம் கைவிடப்பட்டது.