districts

img

அரசு ஊழியர்களை கொலைகாரப் பாவிகள் என்பதா?

உடுமலை, நவ.23 - அதிமுக கூட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொலைகாரப் பாவிகள் எனப் பேசிய முன்னாள் அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசனைக் கண்டித்து சனியன்று உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூரில், அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச் சருமான திண்டுக்கல் சீனிவாசன், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் 80 லட்சம் வாக்குகளைச் செலுத்தாமல் அதிமுகவை தோற் கடித்த கொலைகாரப் பாவிகள் என பேசியுள்ளதாக கூறப்படு கிறது. அவரது இந்த பேச்சைக் கண்டித்து, உடுமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்  செய்தனர். இதில், அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சிறையில் தள்ளி கொடுமைப்படுத்திய அதி முக கொடுங்கோல் ஆட்சியை மறந்துவிட முடியாது. அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்ததோடு, கோரிக்கை மனுவை வாங்கி பார்க்கக்கூட மறுத்தவர்கள். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரான  ஆட்சி புரிந்தவர்கள் என்ற அடிப்படையில் அனைத்து பகுதி  மக்களும் பெரும்பான்மையாக அதிமுகவை எதிர்த்து வாக்க ளித்தனர். இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு அர சியல் அநாகரிக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது. இது  கண்டிக்கத்தக்கது என முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் அ.ராணி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியன், மாநில துணைத்த லைவர் சி.பரமேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் எஸ்.ராணி  நன்றி கூறினார். நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட அரசு  ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.