districts

img

நுண் நிதி நிறுவனங்களிடமிருந்து பாதுகாத்திடுக

தருமபுரி, டிச.5- நுண் நிதி கடன் பிரச்சனையி லிருந்து பெண்களை பாதுகாக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினனர் ரிசர்வ்  வங்கி ஆளுநருக்கு, ஆட்சியர் மூலம் வரைவு மனு அளித்தனர். 2022 ஆம் ஆண்டு சிறு நிதித் துறைக்கான முதன்மை சுற்றறிக் கைகளை திரும்பப்பெறுதல் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவ னம் மற்றும் நுண்நிதி நிறுவனங் களை (என்பிஎப்சி - எம்எப்ஐ)  முன்னுரிமை துறை கடனளிப்பி லிருந்து நீக்க வேண்டும். தனியார் கடன் வழங்குபவர்களுக்கு அதிக பட்சமாக 12 சதவிகித எளிய வட்டி விகிதமாக வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இருப்பினும், ரிசர்வ்  வங்கி பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள்,  கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டு றவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு (அரசு மானியத்துடன்) 4 முதல் 9 சத விகிதம் வரை முன்னுரிமை துறை கடனளிப்பு விகிதத்தில் நுண் நிதி கடன்களை தாராளமாக வழங்க அறிவுறுத்த வேண்டும். நுண் நிதி நிறுவனங்களால் துன்புறுத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பெறவும், அவற்றை தீர்ப்பதற்கும், அனைத்து மாநில, மாவட்ட மையங்களிலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என வலியு றுத்தி ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு, ஆட்சியர் மூலம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். தருமபுரி ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி, நிர்மலா ராணி, மீனாட்சி, கே.சுசிலா, தமிழ்மணி ஆகி யோர் கலந்து கொண்டனர். கோவை இதேபோன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, பொருளாளர் உஷா, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாவட்ட நிர்வாகி தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.