கோவை, ஜூலை 15- நெசவாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, நெசவாளர்கள் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கோவை மாவட்டம், சிறுமுகையில் வெள்ளி யன்று நடைபெற்றது. 1985 ஆம் ஆண்டு கைத்தறி நெசவுக்கு என ஒதுக்கப்பட்ட ரகங் களை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது தடை செய்யப் பட்டுள்ளது. நலிந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும். கைத்தறி நெசவு தொழிலாளருக்கென தனி யான வங்கியை துவங்க வேண்டும். நல வாரியம் மூலம் ஓய்வூதியத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிறுமுகை ராமர் கோயில் மண்டபம் பகுதியிலிருந்து துவங்கிய பேரணியை சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் நிர்வாகியான இ.என்.இராஜ கோபாலன் துவக்கி வைத்தார். இந்த பேரணி நால் ரோடு, அம்பாள் பள்ளி, எஸ். ஆர்.எஸ். நகர், சௌ டேஸ்வரி நகர், வஉசி நகர் வழி யாக தியோட்டர் மேடு வளா கத்தை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி. முத்துசாமி தலைமை ஏற்றார். எம். வெங்கடேசன் வரவேற்புரையாற் றினார். சிஐடியு கைத்தறி நெச வாளர் சங்க நிர்வாகி டி.ஆர்.ராம சாமி, கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கைநெசவு தொழிலாளர் களுக்கு கடந்த காலத்தில் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு சரி பகுதிக் கும் கீழாக சுருங்கிவிட்டது. இத னால் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக விசைத்தறியில் நவீன இயந்திரங்கள் மூலம் கைத் தறி ரகங்களை மிகக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து சந்தை யில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கைத்தறி ரகங்கள் சந்தை யில் தேங்கி கிடப்பதால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது சமூக பதட்டத்தை தற்போது உருவாக்கி யுள்ளது.
குறிப்பாக, கைநெசவுத் தொழி லாளிகளின் அடுத்த தலைமுறை யில் ஒரு பகுதியினர் வேறு வகையான வேலை வாய்ப்புகளை பெற்று சென்றுள்ள நிலையும் ஏற் பட்டுள்ளது. கைநெசவு தொழிலா ளியாகவே இருப்பவர்களுக்கு திரு மணத்திற்கு பெண் வீட்டார் தயங்கு கின்றனர்.வருமானம் இல்லா மலும், விலைவாசியை எதிர் கொள்ள முடியாமலும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி யால் கடன் வலையில் கைத்தறி நெசவாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை பாதுகாப்பது இன்றைய அவசர அவசிய தேவை என்பதால் கைத்தறி நெசவாளர் களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் என கோரிக்கைகள் முழக்கங்கள் எழுப் பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு கைத்தறி சங்கத்தின் நிர்வாகிகளான பரமேஸ்வரன், பொன்ராஜ், சிஐடியு கோவை மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் கே.ரத்தினகுமார் உள் ளிட்ட 3000க்கும் மேற்பட்ட நெச வாளர்கள் கோரிக்கை அட்டை களுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்த நிர்வாகிகளில் ஒருவரான திம்மராம்பாளையம் டி.ஆர்.ராமசாமி நன்றி கூறினார்.