districts

img

மருந்தாளுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடுக

சேலம், பிப்.9- மாநகராட்சி மருந்தாளுநர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலத்தில் அனைத்து மருத்தாளு நர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்தில் மருந்தாளு நர் மற்றும் பள்ளி சிறார் நல மருந்தா ளுநர்கள், கொரோனா நோயாளி மற்றும் இதர நோயாளிகளுக்கு அரசின்  அனைத்து திட்ட மருந்துகளை தடை யின்றி தொய்வில்லாமல் பாதுகாப்பு அங்கி கவசம் அணியாமல் வழங்கிய பணியினை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அரசு ஏற்றுக்கொண்ட பல ஆண்டு கோரிக்கையான நகர்ப்புற மருந்தாளுநர்களை பணிவரன் முறை  செய்ய வேண்டும். துணை இயக்குந ரகம் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார  நிலையங்களில் முறையே தலைமை  மருந்தாளுநர் மற்றும் கண்காணிப்பா ளர் பணியிடம் உருவாக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து,  பழைய பென்சன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். மாத்திரைகள் வழங்க  மாத்திரை கவர்களை வழங்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறை  மருந்தாளுநர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வை போல மாநகராட்சி மருந்தாளுநர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டு அரசு அனைத்து மருந்தாளுநனர் சங்கத்தி னர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வேலம் மருத்துவப்பணிகள் துணை  இயக்குநர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்  மாவட்டத் தலைவர் கீ.கிரிராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலா ளர் ப.சுகுமார், மாவட்டச் செயலாளர் பெ.தனராஜ் ஆகியோர் பேசினர். இதில்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் சுரேஷ், மருத்தாளுநர் சங்க  மாவட்டப் பொருளாளர் கேசவமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தா ளுநர் சங்கத்தின் சார்பில் ஈரோடு  மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை  இயக்குநர் அலுவலகம் (திண்டல்)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ரொசா ரியோ தலைமை ஏற்றார். அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜயம னோகரன், பொருளாளர் ஆர்.சுமதி உள் ளிட்ட சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநிலச்  செயலாளர் க.இளங்கோ சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநில  துணை பொதுச் செயலாளர் மு.சீனிவா சன் நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் ஏ.பி.மணிவண் ணன் நன்றி கூறினார்.