தாராபுரம், ஜன.18- தாராபுரம் அருகே மஞ்சு விரட்டு நடத்த காவல் துறையினர் தடை விதித் ததால், ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். பொங்கல் தினத்தை முன்னிட்டு தாராபுரத்தை அடுத்துள்ள தளவாய் பட்டிணத்தில் வட மஞ்சுவிரட்டு போட் டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டி கையை ஒட்டி தளவாய்பட்டிணம் பகு தியில் கடந்த 100 வருடங்களாக வட மஞ்சுவிரட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடப்பாண்டு மஞ்சு விரட்டு நடத்த அனுமதி பெறாததால், தாராபுரம் காவல் துறையினர் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதித்தனர். இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக் கள் 500க்கும் மேற்பட்டோர் சாலைமறி யலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாலைமறியலில் ஈடு பட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், தளவாய்பட்டிணம் அண்ணா திடலில் வட மஞ்சுவிரட்டு விழா நடைபெறும்.
இந்த விழாவில் அரசு விதிமுறை களுக்குட்பட்டு மாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது மாடுபிடி வீரர் கள் வால் மற்றும் கொம்புகளை பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை, மாட்டின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அனுமதி மறுக்கப்படும். மஞ்சுவிரட் டில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற் றும் மாட்டின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்யப் பட்டனர். இப்போட்டியில் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தள வாய்பட்டினம், செலாம்பாளையம், கள்ளிவலசு உள்ளிட்ட 50க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வர். மேலும், திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற் பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், நடப்பாண்டு மஞ்சு விரட்டு நடத்த அனைத்து ஏற்பாடுக ளும் செய்யப்பட்ட நிலையில், திடீ ரென காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியலில் ஈடு பட்டுள்ளோம், என்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத் திற்கு வந்த தாராபுரம் கோட்டாச்சி யர் குமரேசன், காவல் துணை கண் காணிப்பாளர் தனராசு, தாசில்தார் சைலஜா மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக வும், அடுத்த ஆண்டு முறையாக அனு மதி பெற்று நடத்துமாறும் தெரிவித்த னர். இதை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.