districts

img

கார் வியாபாரிகள் சங்கத்தின் நிகழ்ச்சி

அவிநாசி, ஆக.18- கணியம்பூண்டி பகுதியில் நடைபெற்ற கார் வியாபாரி கள் மற்றும் ஆலோசகர் நல கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பலர்  கலந்து கொண்டனர். தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல  மாநிலக் கூட்டமைப்பின், 7 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி,  திருப்பூர் மாவட்டம், கணியம்பூண்டி பகுதியில் ஞாயிறன்று  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட் டோர் வாழ்த்துரைனார். இதனைத்தொடர்ந்து மாநிலத் தலை வர் சிவக்குமார் பேருரையாற்றி, சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு களை வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு வருட  காலமாக ஆர்டிஓ அலுவலகப் பணிகளுக்கு காலதாமதம் ஆகி றது. இதனை விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும். அதே போல. ஆர்டிஓ அலுவலகம், ஆர்சி புக் சம்பந்தமாக தபால்  துறை மூலம் அனுப்புவதால் கார் வியாபாரிகள் பாதிப்படை கிறார்கள். எளிய வகையில் வியாபாரிகளுக்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் மாவட்டச் செய லாளர், மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன், மாவட்டப்  பொருளாளர் சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.