districts

நிலுவைத் தொகை கேட்டு பேராசிரியர்கள் போராட்டம்

பொள்ளாச்சி, பிப்.12- அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரி யர்கள், பணி மேம்பாடு தொடர்பான அர சாணை எண்:5யை முழுவதுமாக அமல்ப டுத்தி, நிலுவைத் தொகையை வழங்க வேண் டும், என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர். அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர், பணி மேம்பாடு  தொடர்பான அரசாணை எண்:5யை முழுவது மாக அமல்படுத்தி, அரசு உதவி பெறும்  கல்லூரி ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும். எம்பில், பிஎச்டி ஊக்க  ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க  வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற்சிக் கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி புதனன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதன் ஒரு பகுதியாக ஏயூடி, மூட்டா ஆகிய அரசு உதவி பெறும் கல்லூரி பேராசி ரியர்கள் அமைப்புகள் சார்பில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலை யில் உள்ள என்ஜிஎம் கல்லூரி முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு என்ஜிஎம் கல்லூரி ஏயூடி கிளைத் தலைவர் என்.அன்பரசு தலைமை வகித்தார். பொள்ளாச்சி கிளைச் செயலாளர் என்.சிவசங் கர், பொருளாளர் சுஜா மேத்திவ், துணைத் தலைவர் முத்துக்குமாரவேல், இணைச்செய லாளர் எஸ்.சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.