districts

img

பேச்சு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

தருமபுரி, பிப்.2- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் (பொ) சு.அனிதா பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர் லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகி யோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட் டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,  மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற 16 மாணவ, மாணவியர்க ளுக்கு ரூ.48 ஆயிரம் ரொக்க பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சியர் (பொ) சு.அனிதா வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியின்போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் தே.ஜெயஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.